பெரியார் பெருந்தொண்டர் அரியலூர் செல்லமுத்து மறைவிற்கு இரங்கல்

viduthalai
1 Min Read

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண் டர் அரியலூர் – வாலாஜா நகரம் ந.செல்லமுத்து (வயது 83) உடல் நலக்குறைவால் நேற்று (6.5.2024) இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மானமிகு செல்லமுத்து அவர்கள் கழகம் நடத்திய பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் பங் கேற்றவர். இல்ல நிகழ்ச்சிகளை கொள்கை வழியில் நடத்தியவர்.
அடக்கமாக இயக்கத் தொண்டினை நீண்ட காலமாக செய்து வந்த அப்பழுக்கற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தை செலுத்துகிறோம்.
அவர் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் கழகத்தி னருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி 
தலைவர்,
திராவிடர் கழகம்

குறிப்பு: இன்று (7.5.2024) மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் பங்கேற்பார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *