பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு மாணவர்கள் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்

viduthalai
1 Min Read

சென்னை, மே 7- பொறியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப் பிக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட் சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இதையடுத்து விடைத் தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடந்தது.
இந்நிலையில், ஏற் கெனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று (6.5.2024) காலை 9.30 மணியளவில் வெளி யானது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டு மொத்தமாக 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.53% அதி கம். மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக் கின்ற நிலையில் 2024-2025 ஆண்டுக்கான பொறியியல் பட்டப்படிப்புக ளில் சேர விரும்புகிறவர் கள் இன்று முதல் (7.5.2024) அதற்காக விண் ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) அறிவித் துள்ளது. இது குறித்து

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) தெரிவித்ததாவது :

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப் பிக்கலாம். ஜூன் 6 வரை https://www.tneaonline மற்றும் org https://www.dte.gov.in என்ற இணைய தளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளங் கள் வாயிலாக விண்ணப் பிக்க இயலாத மாணவர் கள் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மய்யம் மூலமும் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம் OBC, BC, BCM, MBC, DNC ,பிரிவினருக்கு ரூ.500, மற்றும் SC, ST பிரிவினருக்கு ரூ.250. இவ்வாறு தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) அறிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *