இதுதான் தமிழ்நாடு: பீகார் கல்வி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு கல்வி அதிகாரிகள் பயிற்சி

viduthalai
1 Min Read

சென்னை, மே 7– எழும்பூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மாநில கல்வித்துறை ஆய்வு மற்றும் பயிற்சி ஆலோசனை கருத்தரங்கம் நேற்று (6.5.2024) நடைபெற்றது.
இந்த ஆலோசனை கருத் தரங்கில் பீகார் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 46 மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த ஆலோசனை கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு கல்வித்துறையில் எந்த அளவு வளர்ச்சியை கண்டுள்ளது என்றும் இதன் மூலம் எந்த அளவு மக்களின் வாழ்வாதாரம் கல்வி யால் உயர்ந்துள்ளது என்பதனை ஆய்வு மேற்கொண்டு அறிந்து கொள்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்வி அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளார்கள்.

மேலும் இங்கு தெரிந்து கொண்ட கல்வி முறைகளையும் தமிழ்நாடு பின்பற்றக்கூடிய கல்வி நடைமுறைகளை பீகார் மாநிலத் திற்கு கொண்டு சென்று அங்கு இதனை விரிவுபடுத்த அரசுக்கு ஆலோசனை வழங்கவும் உள்ளார் கள்.

5 சுற்றுகளாக பீகார் மாநில கல்வி அதிகாரிகளுக்கு தமிழ்நாட் டில் பயிற்சி வழங்கப்பட்டு வரு கிறது.
இதற்கு முன் இரண்டு சுற்றுகள் நிறைவ டைந்து விட்ட நிலையில், மூன்றாவது சுற்றிற்கான அதிகாரி கள் தற்போது வந்துள்ளனர் அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத் தில் தமிழ்நாடு கல்வித்துறையின் அமைப்பு குறித்தும் தமிழ்நாடு கல்வித்துறையில் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தயாரிக் கப்படும் பாட புத்தகங்கள் குறித் தும் பீகார் கல்வித்துறை அதி காரிகள் கேட்டறிந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *