உலக வங்கி மூலம் வறிய நாடுகளுக்கு உதவி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

1 Min Read

 புதுடில்லி, செப்.10 ‘ஜி-20’ மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டில்லி வந்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை  வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

‘குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளுக்கு உதவுவதற்காக ஜி-20 நாடுகளின் ஆதரவுக்கு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்துகிறார். உலக வங்கியின் நிதிநிலைமையை ஒருமுறை உயர்த்தும் வகையில், ஜி-20 நாடுகள் அதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். அது, உலக வங்கியின் ஆண்டு சலுகை அல்லாத கடன் தொகை அளவின் 3 மடங்குக்கு இணையாக இருக்க வேண்டும். இந்த முயற்சி, உலக வங்கியை வலுவான அமைப்பாக மாற்றும். 

மேலும் ஏழை நாடுகளின் அவசர தேவைகளுக்கு உதவ முடியும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *