சென்னை, மே 7- தி.மு.கழகத் தலை வரும் முதலமைச்சருமானமு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலானதிராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. அகில இந்திய சராசரி பொருளாதார வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகம் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10புள்ளி 69 சதவீதமாக இருக்கும் என மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதித்துறைக்கான மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சி.ரங்கராஜன் மற்றும் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் விவசாயம், சுரங்கம், கட்டுமானத்துறை, உற்பத்தித் துறை, வணிகம்,போக்குவரத்து, நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி குறித்த தரவுகளின் அடிப்படையில், அண்மை யில் முடிவடைந்த 2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி 7.3 சதவீதமாகஇருந்த நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி விகி தம் 9.44 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. என்று இந்த ஆய்வறிக்கை குறிப் பிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் முன்னிலை மாநிலம்!
பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள மாநிலம் என்பதால், அகில இந்திய சராசரியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு, ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் முன்னேறிய நாடுகளின் வட்டி விதிதங்கள் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பொருளா தாரம் பாதிக்கப்பட்ட போது, அதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் இருந்ததாகவும், ஆனால், மற்ற மாநிலங்களைவிட தமிழ் நாடு இதன் பாதிப்புகள் மற்றும் பண வீக்கத்தில் இருந்து வேகமாக விடுபட்ட தாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சில ஆலோ சனைகளையும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் முன்வைத்துள்ளது. அரசின் கடன்களை கட்டுப்படுத்துவது, ஒன்றிய அரசின் கடன்களை ரத்து செய்வது, மாநிலத்திற்கான நிவாரண நிதி பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், 16-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை செயல் படுத்தினால், தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் மேலும் அதிகாரிக்க வாய்ப்புள்ள தாகவும் இந்த ஆய்வறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்திக் கட்டு ரையின் முக்கிய அம்சம் வருமாறு:-
2024-2025இல் தமிழகப் பொருளா தாரம் 8.08% முதல் 10.69% வரை வளர்ச்சியடையலாம். இந்த உண்மை யான வளர்ச்சி விகித புள்ளிவிவரங்கள் ஆய்வு ஒன்றில் வெளியாகி உள்ளது. மாநிலப் பொருளாதாரம் குறித்த ஆய்வு, மதராஸ் ஸ்கூல் ஆப்எகனாமிக்ஸ் தலைவர் சி.ரங்கராஜன் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் ஆகியோரால் நடத் தப்பட்டது. சமீபத்தில் முடிவடைந்த 2023-2024 நிதியாண்டில், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம்8.08% முதல் 9.44% வரை மாறுபடுகிறது.
2023-2024 ஆம் ஆண்டில் நாட்டின் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3% என்று மாநில நிதித் துறையால் நியமிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. “சிறப்பாகச் செயல்படும் மாநிலமாக” இருப்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி, எல்லா சாத்தியக்கூறுகளிலும், இந்தியாவை விட வேகமாக இருக்கும்.
2005-2006 மற்றும் 2022-2023க்கு இடைப்பட்ட பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கிய 2005-2006 முதல் 2011-2012 வரை அகில இந்திய அளவில் 10.3% “வலுவான உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக” இரண்டு பொருளாதார வல்லுநர்கள், தெரிவித்தனர். அப்போது நாட்டின் வளர்ச்சி 8.23% ஆக இருந்தது. இருப்பினும், அதன் சராசரி வளர்ச்சி விகிதம் 2012-2013 முதல் 2022–2023 வரை (2011-2012 தொடர்) 6.21% ஆகக் குறைந்துள்ளது. இது அகில இந்திய அளவில் 5.73% ஆக இருந்தது.
வளர்ச்சிப் பாதையில் “கீழ்நோக்கிய மாற்றம்”இருப்பதை ஒப்புக்கொண்ட அவர்கள், மற்ற பெரிய மாநிலங்களுக்கும் இது “உண்மை”என்று கூறினார்கள்.
“ஒரு முக்கிய காரணம் 2011-2012 முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் முறையின் மாற்றமாக இருக்கலாம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
மாநிலத்தின் பொருளாதாரம் – கோவிட்-19, ரஷ்யா-உக்ரைன் மோதல், மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முன்னேறிய நாடுகள் வட்டி விகிதங்களை உயர்த்தியது என மூன்று “வெளிப்புற அதிர்ச்சிகளால்” பாதிக்கப்பட்டது. தொற்று நோயின் தாக்கத்தில் இருந்து “கிட்டத்தட்ட முழுமையாக மீண்டுவிட்ட தாகத் தோன்றினாலும்”, “இந்தியாவின் வளர்ச்சி முறையை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி உலக ஏற்றஇறக்கங்களுக்கு ஆளாகக்கூடியது” என்றுஇந்த போக்கு சுட்டிக்காட்டுகிறது.
மாநிலம் இரட்டை இலக்க வளர்ச் சியைப் பதிவு செய்யும் திறனைக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்ட அவர்கள், 2021-2022 முதல் 2022-2023 வரை சராசரி ஆண்டு வளர்ச்சி 8% என்று குறிப்பிடு கின்றனர். “வரும் ஆண்டுகளில் இந்த வேகத்தை முன்னெடுத்துச் செல்வது அவசியம்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
-இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.