உலக முதல் உதவி நாள் உயிர் காக்கும் தானியங்கி சாதன சேவை சென்னை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்தார்

1 Min Read

அரசியல்

சென்னை, செப்.10 உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி மற்றும் ‘அலெர்ட்’ அறக்கட்டளை இணைந்து, ரிப்பன் மாளிகை கட்டடத்தில், உயிர் காக்கும் தானியங்கி கருவியின் செயல்பாடு மற்றும் முதலுதவி பயிற்சியை, நேற்று (9.9.2023) நடத்தின. 

இதை, மேயர் ஆர். பிரியா துவக்கி வைத்து பேசியதாவது:

உயிருக்கு ஆபத்தான விபத்து, மாரடைப்பு ஏற்பட்டால் உயிர் காக்கும் கருவியாக, ‘டிபிரிலேட்டர்’ எனும் கருவி இருக்கும். சுயநினைவு இல்லாமல் இருக்கும் நபரை மீட்டு இதயத் துடிப்பு சீராக்க இக்கருவி உதவும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், இக்கருவி பொருத்தப் படும். 

தானியங்கி குரல் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொதுமக்கள் எளிதாக பயன்படுத்த முடியும். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப் படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

தெற்கு மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு, இந்த முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. சாலை விபத்தில் சிக்கிய நபருக்கு உடனடி முதலுதவி சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என, அப்போலோ மருத்துவ மனை ஊழியர்கள் பயிற்சி அளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *