சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணுக்கு கூட்டுப் பாலியில் கொடுமை!

1 Min Read

லக்னோ, செப்.10 – பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் தனது தோழி மூலமாக கடன்  வாங்கியுள்ளார். கடனை திருப்பி கொடுக்க கால தாமதம் ஆனதால், கடன் பற்றி சமாதானம் பேசிக்  கொள்ளலாம் என தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை தோழி ஒரு  ஒட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு  கடன் கொடுத்ததாக கூறப்படும் 2 ஆண்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, சமைக்கப்படாத இறைச்சியை உண் ணுமாறு கொடுமைப் படுத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மேலும் பாலியல் வன் கொடுமை சம்பவத்தை  காட்சிப் பதிவு செய்து ரூ.5 லட்சம் தருமாறு அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தோழி உள்பட 3 பேரையும் வன்கொடுமை சட்டம்  மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்கின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *