மறைவு : கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை

Viduthalai
1 Min Read

சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் ச.அனந்த வேல், மானாமதுரை திராவிடர் கழக நகர கழக தலைவர் ச.வள்ளி நாயகம் ஆகியோரின் தாயார் திருமதி. முத்து லட்சுமி சங்கரன் அவர்கள் நேற்று காலை (09.09.2023) 7.00 மணி அளவில் இயற்கையெய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இறுதி நிகழ்வில் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், பொதுக் குழு உறுப்பினர் அ.மகேந்திரராசன், பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் க. வீ.செயராமன், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி மதிப்பிற்குரிய பொ.நடராசன் அவர்கள், மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *