தென்காசி மாவட்ட கழக சார்பில் 100 விடுதலை சந்தாக்கள்

viduthalai
1 Min Read

தென்காசி, மே 6- 5.5.2024 அன்று இரவு எட்டு மணியளவில் தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ.எழில்வாணன் முன் னி லையில் நடைபெற்றது. கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் வகுத்தளித்த கொள்கைகளை பரப்பு வதே வாழ்நாள் பணியாக தொண்டாற்றி வரும் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் கட்ட ளையை நிறைவேற்றித்தர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை ஏற்று 100 விடுதலை சந்தாக்கள் திரட்டித்தருவதென முடிவு செய்யப்பட்டது.
பொதுக்குழு உறுப்பி னர் பி.பொன்ராசு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சவுந்திர பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் செந் தில் குமார், கீழப்பாவூர் கழகத்தலைவர் மு.இராம சாமி, ஆலங்குளம் நகரத் தலைவர் பெரியார் குமார், நகர செயலாளர் ஞானராசு, தென்காசி மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சீ.செங் கதிர் வள்ளுவன், செல்வ மணி ஆகியோர் கருத் துரை வழங்கியதுடன், ஒவ்வொருவரும் பத்து, அய்ந்து என விடுதலை சந்தாக்கள் சேர்த்தளிப்ப தாக உறுதி கூறி சந்தா புத்தகங்களை பெற்று கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *