ஜெயங்கொண்டம், செப்.10 – மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தையும் அறிவையும் வளர்ப்பதே தமிழ் இலக்கிய மன்றத்தின் நோக்கமாகும்.
தமிழ் மன்றத்தில் நடை பெறும் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்க ளுடைய திறமைகளை வெளிக் கொணரு கின்றனர்.
7.9.2023 அன்று ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா பள்ளி முதல்வரின் தலை மையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
வரவேற்பு நடனத்துடன் விழா இனிதே தொடங்கியது.மாண வர்கள் பல்வேறு வேடங்களில் வருகை புரிந்திருந்தனர். மேலும் திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை, தமிழின் மேன்மை, தமிழின் சிறப்பு பற்றி மாணவர்கள் உரையாற்றினர் தங்களின் கலை நிகழ்ச்சிகள் மூலம் அய்வகை நிலங் களையும் நம் கண் முன் கொண்டு வந்தனர்.
இவ்விழாவில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.