சிங்கப்பூர் கோபிநாதன் மறைவு குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல்

1 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சிங்கப்பூரின் (மறைந்த) பிரபல வணிகர் வி.நமசிவாயம் அவர்களது மகனும், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்
கல்லூரி மேனாள் முதல்வர் எஸ்.ராஜசேகரன் அவர்களது மைத்துனரும் அனுசுயா ராஜசேகரன் அவர்களது
சகோதரருமான திரு.கோபிநாதன் அவர்கள் (வயது 70) உடல்நலக் குறைவால் நேற்று (4.5.2024) சிங்கப்பூரில் காலமானார்.
இன்று (5.5.2024) பகல் 12.45 மணிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவரது வாழ்விணையர் திருமதி மோகனா,
கவிதா மாறன் ஆகியோர் சிங்கப்பூர் கின்மின் டிரைவ் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இறுதி மரியாதை
செலுத்தினர். திருமதி தேவகி, மகன்கள் புவனேசுவரன், விக்னேசுவரன், சகோதரர் வழக்குரைஞர் வாசன், திருமதி
தைலம்மாள் நமசிவாயம் ஆகியோருக்கு ஆறுதல் கூறி – இரங்கல் தெரிவித்துத் திரும்பினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *