‘சுயமரியாதை இயக்க’ நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா

viduthalai
3 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

பெரம்பலூர், மே 5- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடி அரசு’ நூற் றாண்டு விழா நடைபெற்றது.
சுயமரியாதை இயக்க நூற் றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழக தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி 3.5.2024 அன்று மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமை யில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே விழா நடை பெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக நகரத் தலைவர் அக்ரி ஆறு முகம் வரவேற்புரையாற்றினார் அதனை தொடர்ந்து மூட நம் பிக்கைகளை போக்கும் வித மாக ‘மந்திரமா தந்திரமா’ என்கிற அறிவியல் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் மு.விஜ யேந்திரன் விளக்கி காட்டி னார்.
பின்னர் கடந்த 100 ஆண்டு களாக தொடர்ந்து இயங்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், குடி அரசு நாளிதழ் கடந்து வந்த பாதைகளைப் பற்றி துரைராஜ் (மதிமுக), சுல்தான் மொய்தீன் (மனிதநேய மக்கள் கட்சி),
ஜெயராமன் (சி.றி.மி), ஈஸ் வரன் (இந்திய தொழிலாளர்கள் கட்சி), ரமேஷ் சி.றி.மி(வி), சுரேஷ் (இ.தே.காங்கிரஸ்), முகுந்தன் (பகுத்தறிவாளர் கழகம் ), ரத்தினவேல் வி.சி.க, உள்ளிட்ட தோழர்கள் விளக்கவுரை ஆற் றினார்கள்.
அதனை தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் பூ.சி. இளங்கோவன், தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்த னைச்செல்வன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிர பாகரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
அப்போது கழக சொற் பொழிவாளர் பூ.சி.இளங்கோ வன் சுயமரியாதை இயக்கம் குறித்து பேசியதாவது;
சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்று கேட்டால், தமிழ்நாட் டில் நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில் பார்ப்பனத் தலைவர்களைக் கொண்ட பார்ப்பனக் கட்சி என்று அழைக்கப்படும் பாஜக சார் பில் ஒரு பார்ப்பனரைக் கூட வேட்பாளராக நிறுத்த முடிய வில்லை அதுதான் சுயமரி யாதை இயக்கத்தின் சாதனை.
என்ன காரணம் என்று கேட்டால் தமிழ்நாட்டில் பார்ப்பனரை வேட்பாளராக நிறுத்தினால் ஜெயிக்க முடி யாது – அந்த நிலையை உருவாக் கியது சுயமரியாதை இயக்கம், அதுமட்டுமா இந்திய பிரதம ராக இருந்த இந்திரா காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டி தலைவராக யாரை நியமிக்கலாம் என்று விவாதம் வந்தபோது அப்போது காங் கிரஸ் கட்சியில் மிக முக்கிய மான பொறுப்பு வகித்த வட இந்தியாவில் இருந்த ஒரு பார்ப் பனர் கூறினார், தமிழ் நாட் டிற்கு ஆர்.வெங்கட்ராமனை நியமிக்கலாம் என்று கூறினார்.
அப்போது இந்திரா காந்தி அவர்கள் கேட்டார், தமிழ் நாட்டில் ஒரு பார்ப்பனரை தலைவராக போடுவதா? பிஷீஷ் மிt’s றிஷீssவீதீறீமீ? தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பனரை எவ்வாறு நியமிக்க முடியும் என்று சொல்லி ஜி.கே.மூப்பனார் அவர்களை தலைவராக நிய மித்தார் அதுதான் சுயமரி யாதை இயக்கத்தின் சாதனை.
பாஜக வாக இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சியாக இருந் தாலும் சரி தமிழ்நாட்டில் பார்ப்பனரை தலைவராக நியமிக்க கூடாது என்கிற சிந்த னையை உருவாக்கியது சுயமரி யாதை இயக்கமும், திராவிடர் கழகமும்தான் என்கிற பெருமை உண்டு.
அதுமட்டுமல்ல தோழர் களே இன்றைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் பெரம்பலூர் ஆ.ராஜா அவர் களைப் பற்றி பேசுகின்றோமே, அவர் பெரியார் பயிற்சி பட் டறையில் உருவாக்கப்பட்ட இரும்பு மனிதர் ஆவார்.
அவரை சிதைக்க வேண்டும் என்று 2ஜி வழக்கு உள்ளிட்ட எத்தனையோ இன்னல்கள் கொடுத்தார்கள் ஆனால் தனி மனிதனாக நின்று நீதிமன்றத் திலே வழக்காடி வென்று இருக் கிறார் என்றால் அது தந்தை பெரியார் துவக்கிய சுயமரி யாதை இயக்கத்தின் வெற்றியா கும் என்று பல்வேறு சாதனை களை விவரித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட இளைஞரணி தலை வர் தமிழரசன் நன்றியுரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *