தஞ்சாவூர், மே 5- பேராவூரணி அருகே உள்ள அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு, பணி நிறைவு பெற்ற பள்ளிக்கல்வித் துறை துணை இயக்குநர் ரூ.10,000 நன்கொடை வழங்கியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், பனஞ் சேரியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக வீர.சந்திரசேகரன், உதவி ஆசிரி யராக க.அண்ணாராணி ஆகியோர் பணியில் உள்ளனர். பின்தங்கிய கிராமப் பகுதியான இங்கு 46 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி மாணவர்களின் செயல் திறன் குறித்து கேட்ட றிந்த, சென்னையில் வசித்து வரும் பணி நிறைவு பெற்ற பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநர் முனைவர் ஏ.ஆர். சசிகலா, கடந்த மார்ச் 27 அன்று காணொலி வாயிலாக, பனஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு மாணவர்களிடம், எண்ணும் எழுத்தும், கற்றல் திறன், காலை உணவுத் திட்டம் குறித்து பேசினார். பின்னர், இயக்குநர் ஏ.ஆர்.சசிகலா பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து, பள்ளித் தலைமை ஆசிரியர் வீர.சந்திர சேகரன் கூறுகையில், “பள்ளி குறித்து இணையதளம் வாயிலாக கேள்விப்பட்ட பணி நிறைவு பெற்ற துணை இயக்குநர், எங்களது பள்ளி மாணவர்களுடன் காணொலி மூலம் உரையாடினார். மாணவர்களுடன் உரையாடியதில், அவர்களிடம் பல கேள்விகளை கேட்டு சரியான பதில் அளித்ததால் மகிழ்ச்சி அடைந்த அவர், பள்ளி வளர்ச்சிக்காக ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். இதனை பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். கூடுதலாக ரூ.5000 பணம் செலவழித்து, ரூ.15 ஆயிரம் மதிப்பில் தொலைநோக்கி கருவி வாங்கி மாணவர்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்த உள்ளோம்” என்றார். இந்தப் பள்ளியில் 13 குழந்தைகளே படித்து வந்த நிலையில், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க பணி காரணமாக, தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பல்கலை., ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
தஞ்சாவூர், மே 5- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புலத்தின்கீழ் இயங்கும், தொழில் மற்றும் நில அறிவியல் துறை, சித்த மருத்துவத் துறை மற்றும் சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை ஆகிய மூன்று துறைகளுடன், ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கால்நடை மருத்துவம் மற்றும் அறிவில் பல்கலைக்கழகம் இணைந்து கடந்த 2.5.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – தமிழ்ப் பல்கலைக்கழகம் இரு நிறுவனங்களிலும் உள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி பரஸ்பர நலன்களின் அடிப்படையில் பயிற்சிகள், குறுகிய படிப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் அல்லது மாநாடுகள் போன்ற கூட்டுக் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் முன்னிலையில், பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் கையொப்பமிட் டார். இதில் ஒரத்தநாடு, அரசு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புலத்தலை வர் முனைவர் என்.நர்மதா, பேராசிரியர் ரங்க நாதன், தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புலத்தலைவர் பேராசிரியர் ரெ.நீலகண்டன், சித்த மருத்துவத்துறைத் தலைவர் பேராசி ரியர் பாரதஜோதி, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத்தலைவர் கு.க. கவிதா, கண்காணிப்பாளர் (பொ) மு.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு சென்ற பள்ளி மாணவன் விபத்தில் பலி
விருதுநகர், மே 5- பள்ளி விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு இந்து மதவெறியை ஊட்டி வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பி னர், திருநெல்வேலி பகுதியில் பயிற்சி முகாமை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவரது மகன் ஆகாஷ்(16) தாம்பரம்-செங்கோட்டை ரயிலில் பயணம் செய்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவராவார்.
இவருடன் சேர்ந்து காரைக்குடி உள்ளிட்ட பல பகுதி களைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்து கொள்ள அதே ரயிலில் பயணம் செய்தனர். அப்போது ஆகாஷ் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரயிலானது விருதுநகர் மற்றும் துலுக்க பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்ற போது திடீரென ஆகாஷ் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவரது முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அந்தபெட்டியில் பயணம் செய்தவர்கள், ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை இழுத்துள்ளனர். இதையடுத்து, சிறிது தூரம் சென்ற ரயில் நடு வழியில் நின்றது. அப்போது அடுத்த பெட்டியில் அதே முகாமில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த திருப்பதி (43), ஆகாஷை அடையாளம் காண் பித்துள்ளார்.
இதையடுத்து, ஆகாஷின் உடல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு
தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி)
காலி பணி இடங்கள்: 504
பதவி: பி.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., சி.அய்.எஸ்.எப்.அய்.டி.பி.பி.எஸ். எஸ்.பி. உள்ளிட்ட ஒன்றிய ஆயுதப்படையில் உதவி கமாண்டண்ட் பதவிகள்
கல்வி தகுதி: பட்டப்படிப்பு
வயது: 1-8-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20, அதிகபட்ச வயது 25. அதாவது 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 2ஆம் தேதிக்கு முன்போ, 2004ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதிக்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14-5-2024
இணையதள முகவரி: https://upsc.gov.in/