தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்குள் 7,030 புதிய பேருந்துகள் இயக்கம்!

viduthalai
3 Min Read

சென்னை, மே 5- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 260 பேருந்துகள், 10 ஆயிரத்து 125 வழித் தடங்களில் இயங்கி வருகின்றன. தின சரி 18 ஆயிரத்து 728 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் பொதுமக்கள் தேவையின் அடிப்படையில் அதிகப்படி யான சிறப்பு பேருந்துகளும் இயக்கப் பட்டு, நாளொன்றுக்கு 1.76 கோடி பயணிகள் பயன்பெறுகின்றனர்.

நாள்தோறும் 51.47 லட்சம் மகளிர் பயணம்
இதில் ‘விடியல் பயணத் திட்டத்’தின் மூலம் மகளிர் நலனுக்காக பயணக் கட்டணம் இல்லாமல் இயக்கப்படும் 7,179 பேருந்துகள் மூலம் 51.47 லட்சம் மகளிர் தினசரி பயணிக்கின்றனர்.

பராமரிப்பில் தனிக் கவனம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தடத்தில் பழுதடை யும் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகபட்சமாக 10 ஆயிரம் கிலோ மீட் டருக்கு 0.10 என்ற அளவில் இருந்தது, கடந்த மூன்று ஆண்டுகளில் பேருந்து களின் பராமரிப்பில் தனிக் கவனம் செலுத்துவதன் காரணமாக 2022-2023 மற்றும் 2023-2024 ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது.

ஊடகங்கள் மூலம் அரசின் கவனத் திற்கு வரும் பழுதுகள் உட்பட, அனைத்து பழுதுகளும் முழுமையாக களையப்பட வேண்டும் என்ற நோக்கத் தில், தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்திற் குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி சரிசெய்ய வேண் டும் என ஏப்ரல் 26 அன்று உத்தர விட்டது. அதைத் தொடர்ந்து தற் போது அனைத்து பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டு போர்க்கால அடிப் படையில் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.

வயது முதிர்ந்த பேருந்துகள்
கரோனா தொற்றுக் காலமான 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய காலக் கட்டங்களில், போக்குவரத்துக் கழகங்களில் எந்த வருமானமும் இல் லாமல், அதிக நிதி நெருக்கடியில் இருந்த காரணத்தால், புதிய பேருந்துகள் எதுவும் வாங்க இயலாத சூழல் இருந் தது.
இதன் காரணமாக பல ஆண்டுகளாக பயன்பாட்டிலுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகி, 31.12.2023இன் படி, பேருந்துகள் சராசரி வயது 9.13 வருடமாகவும், வயது முதிர்ந்த பேருந் துகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 582 ஆகவும் (52.73 சதவிகிதம்)இருந்தது.

புதிதாக 7,682 பேருந்துகள்
இந்நிலையில், அரசு கடும் நிதி நெருக்கடிக்கு இடையிலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 2022-2023இல் 1,000 புதிய பேருந்துகள், 2023-2024இல் 1,000 புதிய பேருந்துகள், 2024-2025-இல் 3,000 பேருந்துகளும், எஸ்.ஏ. டி.பி. திட்டத்தின் கீழ் 16 பேருந்துகளும் மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 2,666 புதிய பேருந்துகளும் என மொத்தம் 7,682 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 652 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு, அதே எண்ணிக்கையிலான வயது முதிர்ந்த பேருந்துகள் அகற்றப் பட்டுள்ளன. மீதமுள்ள 7,030 பேருந்துகளும் இந்த நிதி ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் அதே எண்ணிக்கையில் உள்ள வயது முதிர்ந்த பேருந்துகள் அகற்றப்பட உள்ளன.

மின்சார பேருந்துகள்
மேலும், மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் சென்னையில் 1,000 மின்சார பேருந்துகள் இயக்கத் திட்ட மிடப்பட்டு, முதற் கட்டமாக 500 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளின் கூண்டினை புதுப்பிக்க 2022-2023இல் 1,000 பேருந் துகளும், 2023-2024இல் 500 பேருந்து களும் என நடவடிக்கை எடுக்கப் பட்டு, இதுவரையில் 839 பேருந்துகள் புதுப் பிக்கப்பட்டு தடத்தில் இயக்கப் பட்டுள்ளன.
மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப் பட்டு தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விபத்தில்லா பேருந்து இயக்கம்
மேலும், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளிப்ப தில் தனிக் கவனம் செலுத்துவதன் காரணமாக 2022-2023ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-2024இல் 29 உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
பொதுமக்களுக்கு தடையில்லாமல் பழுதுகள் மற்றும் விபத்து இல்லாத பேருந்து இயக்கத்தை இலக்காக கொண்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் போக்கு வரத்துத் துறை செயல்பட்டு வருகிறது.

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *