கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

1 Min Read

சென்னை,மே5- கோடை விடு முறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத் தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் பள்ளி மாண வர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு கள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை வழங்கப் பட்டுள் ளது. இந்நிலையில் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வி துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கடும் வெப்பம் நிலவி வருவதால் கோடை விடு முறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்ன ரும், பல பள்ளிகளில் சிறப்பு வகுப் புகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
கடுமையான வெப்பம் நிலவும் இந்த காலத்தில் கட்டாயமாக சிறப்புவகுப்புகள் நடத்தக் கூடாது.

இதுசார்ந்து தங்களின் ஆளு கைக்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். அதை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள் ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாத மும் விடுமுறையில் சிறப்பு வகுப் புகள் நடத்தக் கூடாது என்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி களுக்கு அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *