குடியரசுத் தலைவர் விருந்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை ப.சிதம்பரம் கண்டனம்!!

1 Min Read

அரசியல்

காரைக்குடி, செப் 10 – நி20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவரின் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  விருந்து அளித்தார்.  இதில்  பங்கேற்பதற்காக அனைத்து முக்கிய தலைவர்களும் குடியரசு தலைவர் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.

காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி,  ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  மல்லிகார்ஜூன கார்கேவை அழைக்காதது, நாட்டின் பெரும்பான் மையாக உள்ள மக்களை மதிக்காததற்கு சமம் என்று  ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் ப.சிதம்பரம்  தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒன்றிய அரசின் நடவடிக்கையை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை; ஜனநாயக மில்லாத அல்லது எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நாட்டில்தான் இதுபோன்ற செயல்கள் நடக்கும். அதாவது பாரதம், ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *