ஒவ்வொரு மாதமும் திருநங்கைகளுக்கான குறைதீர் முகாம்

1 Min Read

காஞ்சிபுரம், செப். 10 –  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை: 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் குறைதீர்க்கும் முகாம் காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடைபெறும்.

மேற்படி முகாமை, திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயனடைந்த பயனாளிகளில் தற்போது 18 வயதை கடந்தும் முதிர்வுத் தொகை பெறப்படாமல் சிலர் உள்ளனர்.

அவர்கள், தாங்கள் பயனடைந்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் நேரில் சென்று சமூகநல விரிவாக்க அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒவ்வொரு மாதத்தின் 2ஆம் செவ்வாய்க்கிழமைகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *