விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 50 சந்தாக்கள் வழங்க முடிவு!

1 Min Read

திராவிடர் கழகம்

விருதுநகர், மே 5- விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கூட்டம் அருப்புக் கோட்டை பெரியார் படிப் பகத்தில் நடைபெற்றது.
மாவட்ட திராவி டர் கழகத்தலைவர் கா.நல்ல தம்பி தலைமை வகித்தார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத்தலைவர் ந.ஆனந்தம் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்.
கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன், மாவட்ட கழக செயலா ளர் விடுதலை தி.ஆதவன், மாவட்டஅமைப்பாளர் வெ.முரளி, மாவட்ட ப.க. செயலாளர் பூ.பத்மநா தன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் இரா.அழ கர், அருப்புக்கோட்டை நகரசெயலாளர் பா.இராசேந்திரன், சண் முகநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கியது டன், ஒவ்வொருவரும் அய்ந்து சந்தாக்கள் திரட் டித்தர உறுதி கூறி சந்தா புத்தகங்களை பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *