சிதம்பரம், மே 5 : சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சித்சபையில் சங்கு ஊதி சிவ புராணம் பாடியதற்கு தீட்சி தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. வட லூரில் வள்ளலார் தொடங்கிய சத்திய ஞானசபை பன்னாட்டு மய்யம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நேற்று (4.5.2024) தெய்வ தமிழர் பேரவை மற்றும் சில அமைப்புகள் சார் பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் காவல்துறையினர் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், தடையை மீறி தெய்வத்தமிழ் பேரவை அமைப்பின் சார்பில் வடலூரில் நடைபெற இருந்த போராட்டத்தில் கலந்து கொள் வதற்காக சேலத்தை சேர்ந்த தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சத்தியபாமா அம்மை யார் உள்ளிட்ட சுமார் 42 பேர் நேற்று (4.5.2024) சிதம்பரத்திற்கு வந்தனர். அவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
இதை தொடர்ந்து சித்சபை மீது ஏறி பாடுவதற்கு கீழ சன்னதி வழியாக சங்கு ஊதிக்கொண்டே கோயிலுக்குள் சென்றனர். அங்கிருந்த நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள், தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடு வதற்கு அனுமதி இல்லை என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிதம்பரம் காவல் கண்காணிப் பாளர் ரகுபதி தலைமையிலான காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து சித் சபையில் ஏறி சிவபுராணம் பாடினர். முடிவில் சித்சபையில் சங்கு ஊதினர். இதற்கு கோயில் தீட்சிதர்கள், இங்கு சங்கு ஊத கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கனக சபையில் இருந்து கீழே இறங்கி வந்த சத்யபாமா அம்மையார், சிவனடியார்களுடன் கோயிலை விட்டு வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சத்தியபாமா அம்மை யார், ‘தீட்சிதர்கள் அராஜக போக்குடன் நடந்து கொண்டு வழிபாடு செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். சிவனடியார்கள் விரட்டப்படும் நிலை இந்த இடத்தில் உள்ளது. இந்த கோயில் நம் முன்னோர்கள் நமக்காக கட்டிய கோயில். அத னால் இந்த கோயிலை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய துறை மீட்க வேண்டும்’ என்றார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபையில் ஏறி சிவபுராணம் பாட எதிர்ப்பாம்
Leave a Comment