குடந்தையின் முதுபெரும் பெரியார் பெருந்தொண் டரும், தாராசுரத்தில் பழம் பெரும் சுயமரியாதைக் குடும் பங்களில் முக்கியமானதுமான திருவாளர்கள் சக்ரபாணி, ஜி.என். சாமி, வையாபுரி ஆகியோரது குடும்ப உறவான கழகக் காப்பாளர் அய்யா மானமிகு வை. இளங்கோவன் அவர்களது துணைவியார் திருமதி இ. பரமேசுவரி (வயது 80) உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (4.5.2024) காலை 6 மணியளவில் காலமானார் என்பதை அறிந்து மிகவும் துயரமும், வேதனையும் அடை கிறோம்.
இக்குடும்பம் ஓர் எடுத்துக்காட்டான சுயமரி யாதைக் குடும்பம்; சுமார் 100 சுயமரியாதைத் திருமணங்கள் இக்குடும்ப உறவுகளிடையே நடைபெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பு ஆகும்!
அம்மா பரமேசுவரி அவர்கள் அக்குடும்பத்தினை கொள்கை வழி நன்கு பாராமரிக்க நண்பர் இளங்கோவனுக்கு முழு ஒத்துழைப்புத் தந்தவர்.
பல போராட்டங்களில் கலந்து கொண்ட குடும்ப உறுப்பினர்கள் பலர் ஏராளம் அங்குண்டு.
துணைவியாரை இழந்து வருந்தும் கழகக் காப்பாளர் தோழர் வை. இளங்கோவன் அவர் களுக்கு நமது ஆறுதலும், குடும்பத்தினருக்கும் மற்றும் இயக்கக் குடும்பத்தினருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீர்மணி
தலைவர்,
திராவிடர் கழகம்
4.5.2024
குறிப்பு: இறுதி நிகழ்வில் இயக்க முக்கியப் பொறுப்பாளர்கள் தலைமைக் கழகம் சார்பில் கலந்து கொள்வார்கள்.