செய்யாறு நகரில் பொதுக்கூட்டம்
செய்யாறு, மே 4- செய்யாறு நகரில் 3.5.2024 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் குடிஅரசு நூற்றாண்டு பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அ. இளங்கோவன் தலை மையில் பொதுக்குழு உறுப்பினர் நகர தலைவர் தி.காமராசன் அவர்கள் முன்னிலையில் மிக எழுச் சியோடு நடைபெற்றது.
கூட்டத்தில் பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன், என்.வி.கோவிந்தன் தலைமை கழக அமைப் பாளர் மு.எல்லப்பன் மற் றும் ஆசிரியர் சின்ன துரை ஆகியோரின் கருத் துரைக்கு பின்னர் மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச்செயலா ளர் அண்ணா.சரவணன் உரைக்குப் பின்னர் சிறப்புரையாற்ற வருகை புரிந்து இருந்த காஞ்சி முனைவர் கதிரவன் எழுச் சியோடு உரையாற்றினார்.
செய்யாறு நகர மக்கள் மிகவும் ஆர்வத்தோடு சுயமரியாதை கருத்து களை தெரிந்து கொண்டு கூட்டம் முடிந்த பின்னர் திராவிடர் கழகத் தோழர் களை வெகுவாக பாராட் டினர்.
கூட்ட முடிவில் நன்றி உரை செலுத்தப்பட்டது .மேற்படி கூட்டத்தில் திராவிடர் கழகத் தோழர் கள் என்.கஜபதி சீனிவா சன் வடமனப்பாக்கம் பொன் சுந்தர், வெங்கடே சன், பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் வெங்கடேசன் மற்றும் திராவிட மாண வர் கழகத்தை சார்ந்த அரவிந்த் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் கள். ஒலி-ஒளி மிக சிறப் பாக அமைக்கப்பட்டிருந் தது. கூட்டத்தினை ஒப்பு தல் வழங்கிய காவல்துறையினருக்கும் தேர்தல் அலுவலருக்கும் நன்றி செலுத்தப்பட்டது.
இறுதியில் இரவு சிற் றுண்டி கழகத் தோழர் கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு கூட்டம் எழுச்சியோடு நிறைவு பெற்றது.