மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.!

Viduthalai
6 Min Read

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் அறிக்கையைச் சுட்டிக் காட்டி ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ & ‘அல்ஜஸீரா’ வெளியிட்டுள்ள தகவல்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

சிறப்புக் கட்டுரை

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் நாள் தொடங்கியது வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரின் மெய்தி இன மக்களுக்கும், குக்கி ஸோ இன மக்களுக்கும் இடையிலான இன மோதல். 21-ஆம் நூற்றாண்டில் ஓராண் டாகத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் மிக நீண்ட இந்த இன மோதலுக்குப் பின்னணியில் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். சின் கைகள் இருப்பதைத் தான் அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் படையின் சிறப்பு அறிக்கை அடை யாளம் காட்டுகிறது என்று ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக் டிவ்’ செய்தியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுவரை இந்த இன மோதலில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1100 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 6,0000 பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

கடந்த மாதம் ஏப்ரல் 11 சனிக்கிழமை அன்று கூட குக்கி ஸோ சமூகத்தைச் சேர்ந்த கிராமத் தன்னார் வலர்கள் (தங்கள் கிராமத்துக்குப் பிற குழுக்களால் பாதிப்பு ஏற்படாமல் ஆயுதம் ஏந்திப் பாதுகாக்கும் இளைஞர்களுக்கு இவ்வாறு பெயர் ஏற்பட்டுள்ளது) இரண்டு பேர் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் மோசமாகச் சிதைக்கப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்து ஜீரோ முதல் தகவல் அறிக்கை (Zero FIR)  காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(குற்றம் எங்கு நடந்தது என்று அறிவதற்காகக் காத்திருக்காமல், பதிவு செய்யப்படும் இந்த வகை முதல் தகவல் அறிக்கைகளுக்கு ஜீரோ முதல் தகவல் அறிக்கை என்று பெயர். எந்த இடத்தில் குற்றம் நடந்தது என்று தெரியவந்ததும், அந்த வரம்புக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு அந்த எப்.அய்.ஆர். மாற்றப்படும்.)
பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலமான மணிப்பூரில் தொடர்ந்துவரும் இக் கலவரம் பொதுப் புத்தியில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மெய்தி மக்களுக்கும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த குக்கி ஸோ மக்களுக்கும் இடையிலான மோதலாக மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிறது.

ஆனால், மெய்தி பழங்குடி இன மக்களை இந்து மதத்தவர் என்று வகைப்படுத்த முடியாது.அவர்கள் இந்து மதத்தை ஒத்த வடிவில் இருக்கும் சனமாஹிசம் என்னும் தங்கள் சொந்த நம்பிக்கையையே பின்பற்று கின்றனர். குறைந்த அளவில் கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் பின்பற்றும் மெய்தி பழங்குடியினரும் உண்டு.
“எனவே இந்தியாவின் பிற பகுதிகளில் இருப்பதைப் போல இரு முனைப்பட்ட இன அல்லது மத மோதலாக இதைச் சுருக்கக் கூடாது, மணிப்பூர் பிரச்சினைக்குப் பல காரணங்கள் உள்ளன” என்று அசாம் ரைபிள்சின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
அசாம் ரைபிள்ஸ் என்பது இந்தியாவின் மூத்த துணை ராணுவக் குழுக்களில் ஒன்றாகும். இந்தப் படைப் பிரிவு தான் மணிப்பூரில் நெடுங்காலமாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. (2004-ஆம் ஆண்டு இந்தப் படைப் பிரிவினரால் தான் தங்ஜம் மனோரமா என்ற பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். அதற்கெதிரா கவும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன என்பது வரலாறு.)
மணிப்பூர் கலவரத்தில் நேரடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைபிள்ஸ் 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மணிப்பூர் கலவரம் தொடர் பாக ஓர் அறிக்கையை தயாரித்துள்ளது. அந்த அறிக்கை யின் விளக்கக் காட்சி(பவர் பாயிண்ட்)யினைப் பார்வை யிடும் வாய்ப்பு ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’வைச் சேர்ந்த அங்கனா சக்ரபர்த்தி என்ற செய்தியாளருக்குக் கிடைத்துள்ளது.

 

சிறப்புக் கட்டுரை

அசாம் ரைபிள்சின் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத அதிகாரி ஒருவர் அந்த பவர் பாயிண்ட் அறிக்கையைத் தனக்குக் காட்டியதாகவும், அதில் மணிப்பூர் முதலமைச்சரும், பா.ஜ.க.வைச் சார்ந்தவருமான பைரன் சிங்கின் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் அங்கனா சக்ரபர்த்தி.
மணிப்பூர் குறித்து அதிகம் பேசாத பிரதமர் மோடி, அண்மையில் தான் “ஒன்றிய அரசின் தலையீடு காரண மாக மணிப்பூரில் முன்னேற்றம் ஏற்பட்டு” வருவதாகப் பேசியிருந்தார். மணிப்பூரில் ஏப்ரல் 19 அன்றும், 26 அன்றும் அம் மாநிலத்தின் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது.

மியான்மா(பர்மா)விலிருந்து நடக்கும் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றங்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குக்கிலாந்துக்கான கோரிக்கை ஆகியவை இக் கலவரத்திற்கான அடிப்படைக் காரணங்களாகச் சொல் லப்பட்டுள்ளன. ஆனால், இதில் அதிகாரத்திற்காகவும், அரசியலுக்காகவும் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டுள்ள செயல்களின் பின்னணியையும், அதன் முதலமைச்சர் பைரன்சிங்கின் போக்கையும் முக்கியமான காரணங் களுள் ஒன்றாகச் சுட்டிக் காட்டியுள்ளது அசாம் ரைபிள் சின் அறிக்கை.

அதே போல, மெய்தி மக்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் தங்கள் இனத்தவரை ஆயுதந்தாங்கிப் போரா டத் தயாரித்துக் கொண்டுள்ளதையும், குக்கி மக்கள் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தன்னார்வலர்களை உருவாக்குவதையும் கவனப்படுத்துகிறது. இது தொடர் பான கட்டுரை தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ்வால் வெளியிடப்பட்டதும், உடனடியாக அதை மறுத்துள்ளது அசாம் ரைபிள்ஸ். ஆனால், இப்படி ஓர் அறிக்கை உருவாக்கப்பட்டதையும், அதைத் தாங்களே பார்வையிட்டுள்ளதாகவும் அல்ஜசீரா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இக் கட்டுரைக்கு உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் அசாம் ரைபிள்சு படைப்பிரிவுக்கு ஏன் ஏற்பட்டது என்பது தான் இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

2022-ஆம் ஆண்டு மெய்தி இன ஆயுதக் குழுவான அரம்பை டெங்கோலின் கமாண்டரான டைசன் ஞாங் பாங் சமூக ஊடகங்களில் படம் ஒன்றைப் பதிவிட்டி ருந்தார். அப் படத்தில், மூன்று கோவேறு கழுதைகளில் ஏறிவரும் போராளிகளின் படம் பொறித்த டிசர்ட் அணிந்த இளைஞர்கள் மத்தியில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் அருகில் லெய் செம்பா ஷனஜோபா என்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பதைக் காண முடிந்தது.
போதைப் பொருள்களுக்கு எதிராக கடினமான நிலைப்பாடு எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு, மலைப் பகுதிகளிலேயே பாப்பி சாகுபடி அதிகம் நடக்கிறது என்று குக்கி மக்களை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அவர்களுக்கெதிரான வெறுப்புணர்வைத் தூண்டி வந்த பாஜக முதலமைச்சரின் செயல் இக் கலவரத் திற்கான முக்கியமான காரணம் என்று தெரிவிக்கிறது அந்த அறிக்கை. மேலும், சட்டம் ஒழுங்குச் சீர்குலைவும், ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதும் இனமோதலைக் கூர்மைப்படுத் தியது என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.

மெய்தி இன மக்களின் மதமான சனமாஹிசத்தை மீளமைக்க வேண்டும் என்றும், மெய்தி இன மக்களைப் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் மெய்தி லீபுன், அரம்பை டெங்கோல் ஆகிய அமைப்புகள் ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்து கின்றன. இதில் அரம்பை டெங்கோல் அமைப்பு 2020-ஆம் ஆண்டு மணிப்பூர் பட்டத்து அரசரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான லெய்சம்ப ஷன ஜோபாவின் கீழ் தொடங்கப்பட்டது.
மற்றொரு அமைப்பான மெய்தி லீபுன் நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ்.சின் தாக்கம் கொண்ட அமைப்பாகும். இவ்வமைப்புக்கு பாஜக முதலமைச்சரின் ஆதரவு இருப்பதாக மெய்தி லீபுன்னின் தலைவர் கூறியுள்ளார்.
நேரடியாக இந்துத்துவாவை முன்னிறுத்தும் மெய்தி லீபுன்னாக இருந்தாலும், பாஜக ஆதரவோடு மெய்தி மதமான சனமாஹிசத்தை முன்னிறுத்தும் அரம்பை டெங்கோலாக இருந்தாலும் இரண்டுமே தீவிரப் போக்குடையவையாகவும், ஆளும் பாஜக ஆதரவு பெற்றவையாகவுமே இருக்கின்றன.

மெய்தி இனம் அழிந்தால் அல்லது வெளியேற்றப் பட்டால், அது காஷ்மீரில் பண்டிட்டுகள் (பார்ப்பனர்கள்) வெளியேற்றம் ஏற்பட்டதைப் போல, மணிப்பூரில் சனாதன தர்மத்தின் அழிவாக இருக்கும் என்கிறார் லீபுன் அமைப்பின் தலைவர் பிரமோத் சிங். அதன் பின்னர் நடந்தவற்றைப் பட்டியலிட்டு, கடந்த ஓராண்டின் நிகழ்வுகளை நினைவுபடுத்துகின்றன தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவின் கட்டுரையும், அல்ஜசீரா செய்தி நிறுவனமும்!
இந்தப் பின்னணியில்தான் பொய்ச் செய்தி பரப்புதல், மக்களைத் தூண்டுதல், திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், குறிவைக்கப்பட்டு நடத்தப்படும் வன்முறை என பக்காவான ஆர்.எஸ்.எஸ். மாடலில் கலவரம் நடந்திருப் பதை கடந்த ஓராண்டுச் செய்திகள் நமக்கு நினைவூட்டும்.

சமூகநீதிக்காகவும், சம உரிமைக்காகவும் போராட வேண்டிய மக்களைப் பழம் பெருமையின் பெயராலும், இனவாதம், மதவாதத்தின் பெயராலும் கூறுபோடும் ஆர்.எஸ்.எஸ்.சின் பணி, மணிப்பூரின் அமைதியைக் கிழித்துப் போட்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
பா.ஜ.க.வையும், அதன் மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸ் என்ற விஷச் செடியையும் வளரவிட்டால் நாட்டுக்கும், மக்களுக்கும் என்ன நிலை ஏற்படும் என்ப தற்கு நேரடிச் சாட்சியாக மணிப்பூர் எரிந்து கொண்டிருக் கிறது ஓராண்டாக!
பார்த்துக் கொண்டு மட்டும் இருப்பதா? அதிலிருந்து பாடம் கற்க வேண்டாமா? அதனால் தான் இந்தியா கூட்டணி ஆர்.எஸ்.எஸ்.சைத் தன் தத்துவ எதிரியாக அறிவித்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது.
2023 மே 3-இல் தொடங்கி நெய்யூற்றி வளர்க்கப்பட்ட சிக்கலுக்கு, 2024 ஜூன் 4-ஆம் நாளுக்குப் பிறகேனும் விடிவு கிடைக்கட்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *