திராவிட மாடல் ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Viduthalai
3 Min Read

சென்னை,மே 4- திராவிட மாடல் ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக் கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்­ளார்.
முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் உல­கப் பத்­தி­ரிகை சுதந்­திர நாள் வாழ்த்துச் செய்தி வரு­மாறு:
1992-இல் வின்ட்­ஹோக்­கில் ஆப்­பி­ரிக்க நாளி­தழ் செய்­தி­யா­ளர்­கள் ஒன்­றி­ணைந்து பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் குறித்து வெளி­யிட்ட அறிக்­கை­யின் நினை­வாக, மே 3-ஆம் நாளை அய்க்­கிய நாடு­கள் அவை­யின் பொதுப்­பே­ரவை ’உல­கப் பத்­தி­ரிகை சுதந்­திர நாள்’-­ஆக 1993-ஆம் ஆண்டு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. இந்­நாள் பத்­தி­ரிகை சுதந்­தி­ரத்­தின் முக்­கி­யத்­து­வம் குறித்த விழிப் புணர்வை வளர்க்­கப் பயன்­ப­டு­கி­றது.

தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வரை பத்­தி­ரி­கைச் சுதந்­தி­ரம் முழு அள­வில் பேணப்­ப­டு­கி­றது.
2021-இல் கழக அரசு பொறுப்­பேற்ற வேளை­யில் உல­கம் முழு­தும் மிகுந்த பாதிப்பை ஏற்­ப­டுத்­திய கரோனா தொற்­றுக் காலத்­தில் தமிழ்­நாட்­டில் செய்தி சேக­ரிப்­ப­தில் அச்­ச­மின்றி இர­வும் பக­லும் பாடு­பட்ட செய்­தி­யா­ளர்­களை முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளாக அறி­வித்­துப் பல்­வேறு உத­வி­கள் அளிக்­கப்­பட்­டன. கரோனா சிறப்பு ஊக்­கத் தொகையை ரூ.3 ஆயி­ரத்­தி­லி­ருந்து ரூ.5 ஆயி­ர­மாக உயர்த்தி வழங்­கி­யது.

கரோனா இழப்­பீட்­டுத் தொகை ரூ.5 இலட்­சத்­தி­லி­ருந்து ரூ.10 இலட்­ச­மாக உயர்த்தி வழங்­கி­யது.
பத்­தி­ரி­கை­யா­ளர் நல வாரி­யம் அமைக்­கப்­பட்டு 3,223 நபர்­கள் உறுப்­பி­னர்­க­ளா­கச் சேர்ப்பு.
பத்­தி­ரி­கை­யா­ளர் ஓய்­வூ­தி­யம் ரூ.10,000 லிருந்து ரூ.12,000 ஆக­வும், பத்­தி­ரி­கை­யா­ளர் குடும்ப ஓய்­வூ­தி­யம் ரூ.5,000 லிருந்து ரூ.6,000 ஆக­வும் உயர்வு. பணிக்­கா­லத்­தில் இயற்கை எய்­தி­டும் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு முத­ல­மைச்­ச­ரின் பொது நிவா­ரண நிதி­யி­லி­ருந்து வழங்­கப்­ப­டும் குடும்ப உத­வித் தொகை ரூ.3 இலட்­சத்­தி­லி­ருந்து ரூ.5 இலட்­ச­மாக உயர்வு.
சிறந்த இத­ழி­ய­லா­ள­ருக்கு ரூ.5 இலட்­சம் பரி­சுத் தொகை மற்­றும் பாராட்­டுச் சான்­றி­த­ழு­டன் கூடிய ‘கலை­ஞர் எழு­து­கோல் விருது’ ஆண்­டு­தோ­றும் அறி­விப்பு.

முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்­டினை முன்­னிட்டு பெண்­மை­யைப் போற்­றும் வகை­யில் சிறப்­பி­ன­மாக இவ்­வாண்டு மட்­டும் கூடு­த­லாக ஒரு பெண் இத­ழி­ய­லா­ள­ருக்கு கலை­ஞர் எழு­து­கோல் விருது வழங்க ஆணை பிறப்­பிப்பு.
பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் ஓய்­வூ­தி­யம் வழங்­கும் திட்­டத்­தில் நிர்­ண­யிக்­கப்­பட்ட பணிக்­கொடை மற்­றும் பணிக்­கால ஆண்டு வரு­மான உச்­ச­வ­ரம்பு ரூ.3 இலட்­சத்­தி­லி­ருந்து ரூ.4 இலட்­ச­மாக உயர்வு.
பத்­தி­ரி­கை­யா­ளர் நல நிதி­யத்­தி­லி­ருந்து வழங்­கப்­பட்­டு­வ­ரும் மருத்­துவ உத­வித் தொகை ரூ.2 இலட்­சத்­தி­லி­ருந்து ரூ2 இலட்­சத்து 50 ஆயி­ர­மாக உயர்வு.

பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்­கென சிறப்பு மருத்­துவ முகாம்­கள்.
எனப் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், செய்தி ஊட­க­வி­ய­லா­ளர்­கள் திரா­விட மாடல் அர­சி­னால் பாது­காக்­கப்­பட்டு போற்­றப்­ப­டும் வேளை­யில் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் உலக பத்­தி­ரிகை சுதந்­திர நாளில் திரா­விட மாடல் அர­சின் சார்­பில் அனைத்து பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்­கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கும் நல்­வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.
-இவ்­வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் குறிப்­பிட்­டுள்­ளார்.

அச்சமின்றி பணியாற்ற உறுதி
மேலும், பத்திரிகை சுதந்திர நாளான நேற்று (3.5.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது,
உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், ஒரு கொடும் யதார்த்தத்தை எதிர் கொள்வோம்: ‘பாஜக ஆட்சியில் பத் திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது.’
பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் மிக மோசமான இடம், கவுரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட் டோரின் படுகொலைகள்; அதிகாரத் தில் இருப்போரைப் பற்றி உண்மையை எடுத்துரைக்கும் சித்திக் காப்பான், ரானா அய்யுப் உள்ளிட்ட பல பத்திரி கையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத் தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள் ளதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
ஜனநாயகத்தில் ஊடகத்தின் பங்கைப் போற்றும் அதே வேளையில், பேச்சு சுதந்திரத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிக்கவும் பத்திரிகையா ளர்கள் அச்சம், கொடுங்கோல் தணிக்கை முறை இன்றிப் பணியாற்றவும் போராட உறுதியேற்போம்!
-இவ்வாறு முதலமைச்சர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *