செய்யாறு மாவட்ட கழக சார்பில் விடுதலைக்கு நூறு சந்தாக்கள்அளிக்க முடிவு

Viduthalai
1 Min Read

செய்யாறு, மே 4- மாவட்ட கழகத் தலைவர் அ.இளங் கோவன் தலைமை யில், மாவட்ட கழக நிர்வாகி கள் கலந்துரையாடல் கூட்டம் படிகலிங்கம் மருந்தகத்தில் நடைபெற் றது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா. குணசேகரன் பங்கேற்று தமிழர் தலைவர் அவர் களின் ஓய்வறியா உழைப் பின் மூலம் பெற்ற பலன் களை விளக்கியும், விடு தலை நாளிதழுக்கு சந் தாக்கள் சேர்த்தளிக்க வேண்டிய அவசியத்தை விளக்கியும் உரையாற்றி னார்.

பொதுக்குழு உறுப்பினர் தி.காமராசு, பெரியார் பெருந்தொண் டர் என்.வி. கோவிந்தன், மாவட்டச் செயலாளர் பொன்.சுந்தர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக் கம் வி.வெங்கட்ராமன், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன் மாவட்ட மாணவர் கழ கச் செயலாளர் அரவிந் தன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கியதோடு ஒவ்வொருவரும் அய்ந்து சந்தாக்கள் திரட்டி தருவ தாக கூறி நன் கொடை புத்தகங்களை பெற்றுக் கொண் டார்கள். மாவட் டக் கழகம் சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் திரட்டித் தருவதென தீர் மானிக்கப்பட் டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *