சென்னை, மே 3- நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் கடந்த 26ஆம் தேதியும் நடைபெற்றது.
இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர் தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்டமான 7ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள் ளது. தேர்தலில் பதிவா கும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப் பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், நாடா ளுமன்ற தேர்தல் முடிவு கள் வெளியானதும் ஜூன் 2ஆவது வாரத்தில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட வாய்ப்பு உள்ளதாக தக வல்கள் வெளியாகியுள் ளன. கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவா தங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.
அவைத்தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு ஜூன் 2ஆவது வாரம் கூடி கூட் டத்தொடரை எத் தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. ஜூன் 2ஆவது வாரத்தில் தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.