சுயமரியாதை இயக்க நூற்றாண்டு-‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா!

viduthalai
8 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு-‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுக்குள்
100 பொழிவுகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தவேண்டும்!
இந்தியாவில் மட்டுமல்ல – உலகத்தில் வேறு எங்கேயாவது சுயமரியாதை இயக்கம் என்று இருக்கிறதா?
தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, மே 3 100 பொழிவுகளை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாடு முழுவதும் நடத்தவேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றோம். அந்த 100 பொழிவுகளைப் புதுப்புது கோணத்தில் ஆய் வோடு அதை ஆவணப்படுத்தக் கூடிய அளவிலே மிகச் சிறப்பாக நடத்தவிருக்கின்றோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா – முதல் நிகழ்வு!

கடந்த 25.4.2024 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா – முதல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
அவரது தொடக்கவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சுயமரியாதையைமிக எளிமையாக விளக்கினார் வி.பி.சிங்

‘‘சரி. இங்கே அமர்ந்திருக்கும் ஒருவர்மீது நான் எச்சில் துப்பினால், என்ன செய்வீர்கள்?’’ என்று பொது மக்களைப் பார்த்துக் கேட்டார்.
எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
‘‘எனக்காக பதில் சொல்லவேண்டும்; என்ன செய் வீர்கள் தெரியுமா? ஓங்கி என் கன்னத்தில் அறைவீர்கள் அல்லவா’’ என்றார்.
‘‘அறைவீர்களா, இல்லையா?” அவர் சொன்னவுடன், ‘‘அறைவோம்” என்றனர்.
‘‘எங்கள்மீது காரணமில்லாமல் எச்சில் துப்பினால், அறைவோம்” என்றனர்.
‘‘இதற்குப் பெயர்தான் சுயமரியாதை; இந்த உணர் விற்குப் பெயர்தான் சுயமரியாதை. அதற்கு அடையாளம்” என்று, சுயமரியாதையை மிக எளிமையாக விளக்கினார் வி.பி.சிங் அவர்கள்.
அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கம்தான் நூறாண்டு காணுகிறது.
இதில் நிறைய சிறப்பு இருக்கிறது. நேரத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக – பல நேரங்களில், மற்றவர்கள் போடுகின்ற கட்டுப்பாட்டை உணர்ந்து நடப்பவன் என்ற நிலையில் – மற்ற எல்லா வற்றிலும் கட்டுப்பாடாக இருக்கக்கூடியவன் – ஆனால், நேரத்தில், உரையாற்றும் நேரத்தில், தேர்தல் பிரச்சாரத் தில்கூட கட்டுப்பாடாக இருக்க முடியவில்லை.
ஆகவே, அந்த நேரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். அந்த வகையில் நண்பர்களே, இக்கூட்டம் ஒரு தொடக்க விழாதான்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாடு முழுவதும் 100 கூட்டங்கள்!

100 பொழிவுகளை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாடு முழுவதும் நடத்தவேண்டும் என்று முடிவெடுத்திருக்கின் றோம். அந்த 100 பொழிவுகளைப் புதுப்புது கோணத்தில் ஆய்வோடு அதை ஆவணப்படுத்தக் கூடிய அளவிலே மிகச் சிறப்பாக நடத்தவிருக் கின்றோம்.
சுயமரியாதை இயக்கத்தை நம்முடைய அய்யா அவர்கள் எப்படித் தொடங்கினார் என்பதை நம்முடைய கவிஞர் அவர்கள் மிக அழகாக எடுத்துச் சொன்னார். குமரேசன் அவர்களும் சொன்னார்.
ஆய்வாளர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஆய்வாளர்கள், ‘‘ஆய்வு செய் கிறோம், ஆய்வு செய்கிறோம்” என்று சொல்லி அந்த ஆய்வை எங்கோ கொண்டு போய் நிறுத்திவிடுவார்கள்.

எந்த ஆண்டு தொடங்கினார் என்பதிலேயே ஆய்வாளர்களுடைய முழு ஆய்வும் முடிந்துவிடும்!

சுயமரியாதை இயக்கத்தை அய்யா தந்தை பெரியார் அவர்கள் எந்த ஆண்டு தொடங்கினார்?
எந்த ஆண்டு என்று ஆய்வாளர்கள் சொல்வதற்குப் பதிலாக, அதனுடைய கொள்கைகளைச் சொல்வதற்குப் பதிலாக – எந்த ஆண்டு தொடங்கினார் என்பதிலேயே அவர்களுடைய முழு ஆய்வும் முடிந்துவிடும். அதைத் தான் கவிஞர் அவர்களும் இங்கே சொன்னார்.
இப்படியும் வைத்துக் கொள்ளலாம்; இப்படி சில பேர் சொல்லலாம். தந்தை பெரியார் அவர்கள் என்றைக்கு காங்கிரஸ் கட்சியில் கேள்வி கேட்டாரோ, அன்றைக்கே சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது என்பது ஒரு கருத்து.
இன்னொன்று, ‘குடிஅரசு’ இதழை, பச்சை அட்டை குடிஅரசு எப்பொழுது தொடங்கினாரோ அன்றுதான் சுயமரியாதை இயக்கம் பிறந்தது என்பது இன்னொரு கருத்து.
‘‘சுயமரியாதை இயக்கத்தைத்
தோற்றுவித்தது ஏன்?’’
இதுபோன்றெல்லாம் பிற்காலத்தில் விவாதிப் பார்கள் என்று தெரிந்துதான் 1937 ஆம் ஆண்டி லேயே ‘‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தது ஏன்?” என்ற புத்தகத்தை தந்தை பெரியார் வெளியிட்டுள்ளார்கள்.
சாதாரண, எளிமையான புத்தகமான அதில், எடுத்த எடுப்பிலேயே இந்தப் பிரச்சினைக்கு இடமில்லாமல், ஒரு முற்றுப்புள்ளி வைத்துத்தான் ஆரம்பிக்கிறார்.

நம்முடைய அறிவின் பக்குவம்!

பெரியாருடைய வாழ்நாள் மாணவனாக இருப்பதில் என்ன ஒரு வாய்ப்பு என்று சொன்னால், திரும்பத் திரும்ப இந்தப் புத்தகத்தைப் படிக்கும்பொழுது, மனதில் புதிய புதிய வெளிச்சங்கள் தோன்றுகின்றன. அவரு டைய எழுத்து ஒரே மாதிரிதான். நம்முடைய அறிவு நமக்குப் பக்குவப்படுகிறது. நாம் வளருகிறோம்; 20 வயதில் புரியாத விஷயம்; 50 வயதில் புரியும்; 50 வயதில் புரியாத விஷயங்கள், 70 வயதில் புரியும். 70 வயதிலும் புரியாத விஷயங்கள், 90 வயதில் புரியும். இது நம்முடைய அறிவின் பக்குவமாகும்.
தந்தை பெரியாருடைய அறிவின் பக்குவம் என்பது வேறு. ஏனென்றால், ஒப்பற்ற சுய சிந்தனையாளர் அவர். அந்த ஒப்பற்ற சுய சிந்தனையாளர் பெரியார் என்ற தகுதிக்கு அவ்வளவு சுலபமாக மற்றவர்கள் வந்துவிட முடியாது; வருவதற்கு எண்ணவும் முடியாது.
எனவேதான், தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில், ‘‘ஒப்பாரும் மிக்காரும் இலார்” என்ற சொல்லுக்கு அவர்கள் முழுக்க முழுக்கத் தகுதி படைத்தவர்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே இயக்கம்!

அவர்கள் எப்படி அந்தத் தகுதி படைத்தவரோ, அதுபோல, அவருடைய சுயமரியாதை இயக்கமும், ‘‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே இயக்கம், உலக அளவிலேயே!” நான் அழுத்தம் திருத்தமாகச் சொல் கிறேன், உலக அளவிலேயே! வேண்டுமானாலும் ஓர் அறைகூவலைப் போல் சொல்லுகிறேன்.

எதையும் எதிர்பார்க்காத ஓர் அமைப்பு!

இப்படித் தொடங்கி, அவ்வளவு எதிர்ப்புகளைச் சந்தித்து, இவ்வளவு மாற்றங்களை அது அடைந்து – இன்றைக்கும் உயிரோட்டமாக, சுயமரியாதை என்று சொன்னால், சுயமரியாதைக்காரர்கள் கட்சி வேறு பாடின்றி, பல இடங்களில் இருக்கிறார்கள்; பல கட்சிகளில் இருக்கிறார்கள்; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார் கள்; ஆண் – பெண் பேதமிலாது இருக்கிறார்கள். உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்கின்ற வெறுப்பில்லாமல் இருக்கிறார்கள். மனிதநேயத்தோடு இருக்கிறார்கள். அவரவர்கள் எதையும் எதிர்பார்க்காமல், சொந்தக்காலில் நிற்கக்கூடிய சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஓர் அமைப்பு – எதையும் எதிர்பார்க்காத ஓர் அமைப்பு.
மற்றவர்களுக்காக, கருப்பு மெழுகுவத்திகள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எரிந்து ஒளியூட்டி, தங் களைத் தாங்களே அழித்துக்கொள்ளக்கூடிய அமைப் பாக இந்த இயக்கம் இருக்கிறது.
பதவி நாடாத இயக்கம் -நன்றி பாராட்டாத இயக்கம் – காலம் கருதி, பருவம் பாராத ஓர் இயக்கம் – அப்படிப்பட்ட ஒரு தனித்தன்மையுள்ள ஓர் இயக்கம் – இந்தப் பூகோளப் பந்தில் வேறு எங்கேயாவது இருக்கிறதா? என்று உங்களைக் கேட்கிறோம். அப்படி இருந்தால், யாராவது சொல்லுங்கள்; அதைத் தலைவணங்கி நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அப்படி இருக்கிறதா? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.
காரணம், தந்தை பெரியார் அவர்கள், அதனுடைய அடிக்கட்டுமானத்தை அமைத்த முறையே ஒரு தனித்தன்மையானது. அதைத்தான் நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.
இந்த இயக்கத்தினுடைய கொள்கைகளைப்பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன்.

இதற்கு எல்லை என்ன?
மனிதம்! மனிதநேயம்!!
சுயமரியாதை என்பது மனிதனுக்கு
ஒரு பொதுக் குணம் – பொதுப் பண்பு!

எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தும், உல களாவிய நிலையில். பிரச்சினைகள் எங்கு இருக்கிறதோ? மனித உரிமைகள் எங்கெல்லாம் பறிக்கப்படுகிறதோ? அது ஜாதியாக இருக்கலாம்; நம்மூரில் தீண்டாமையாக இருக்கலாம். பெண்ணடிமை உலகம் முழுவதும் இருக்கிறது; அதேபோன்று, மூடநம்பிக்கை என்பது ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமாக இருக்கும். இன்றைக்குப் புதிது புதிதாக அது இனப்போராக சில இடங்களில் அது இருக்கும்.
ஆகவேதான், சுயமரியாதை என்பது மனிதனுக்கு ஒரு பொதுக் குணம் – பொதுப் பண்பு என்பதை வழியாக வைத்திருக்கிறார்கள் என்பது ஒன்று.
இரண்டாவது நண்பர்களே, உலகத்தில் எத்தனையோ சமூகப் புரட்சி இயக்கங்கள் இருக்கின்றன.
பிறந்தன, வளர்ந்தன, மறைந்தன; சில இடங்களில் இருக்கின்றன, சிறிய குறிப்பிட்ட அளவில்.
பகுத்தறிவாளர் கழகங்களாக, நாத்திகக் கழகங்களாக, மனித அமைப்புகளாக இன்னும் வெவ்வேறு அமைப்புகளாக இருக்கின்றன.
இந்தியாவில் மட்டுமல்ல – உலகத்தில் வேறு எங்கேயாவது இருக்கிறதா?
ஆனால், எந்த அமைப்பிற்காகவாவது, மனிதன் என்று ஒருவன் பிறந்து, வாழ்கின்ற நேரத்தில், அவன் சொந்தமாக சிந்திக்கக்கூடிய அளவிற்கு, தன்மானமும், இனமானமும் பெற் றிருக்கக்கூடிய அந்த வாய்ப்புள்ள – சுயமரியாதை என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம் – இந்தியாவில் மட்டுமல்ல – உலகத்தில், தந்தை பெரியார் தோற்றுவித்ததைத் தவிர, வேறு எங்கேயாவது தோன்றியிருக்கிறதா? இதுவரையில்.
சுயமரியாதை என்கிற பெயர் எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் சொந்தமானதாகும்!
சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டு நூறாண்டு கள் ஆகியிருக்கின்றன. நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுகிறோம். சுயமரியாதை என்கிற பெயர் நமக்கு மட்டும் ‘காபிரைட்’ இல்லை. எல்லாக் கட்சிக் காரர்களுக்கும் சொந்தமானதாகும்.
பாதிக்கப்படுகிறவருக்குக் கோபம் வந்தால் என்ன சொல்கிறார், ‘‘எனக்கு சுயமரியாதை இல்லையா?” என்கிறார். ‘‘என்னுடைய சுயமரியாதை என்னாவது?” என்று கேட்கிறார்.

‘காற் செருப்பை பிறனொருவன்
கழிவிடத்தில் தள்ளினாலும்
பொறாத உள்ளம்!’
என்றார் புரட்சிக்கவிஞர்.
புரட்சிக்கவிஞர், சுயமரியாதையை
எங்கே சொல்லுகிறார் பாருங்கள்!

ஒருவர், ஓரிடத்தில் செருப்பை வரிசையாக விட்டு விட்டுச் செல்லும்பொழுது, வேறொருவர் வந்து, அந்த செருப்பை அலட்சியமாக காலால் தள்ளினார் என்றால், அதைப் பார்த்தவருக்குக் கோபம் வரும். அவரை தள்ள வில்லை; அவருடைய செருப்பைத்தான் தள்ளினார்.
புரட்சிக்கவிஞர், அந்த சுயமரியாதையை எங்கே சொல்லுகிறார் என்பதைப் பாருங்கள்,
‘காற் செருப்பை பிறனொருவன்
கழிவிடத்தில் தள்ளினாலும்
பொறாத உள்ளம்!’

அதாவது மனிதனுக்கு இருக்கின்ற ஆவேசம், நமக்கு மட்டும் சொந்தமா?
கருப்பராக இருக்கக்கூடியவருக்கு, வெள்ளையர் கொடுமை வரும்பொழுது, அந்த ஆவேசம் இருக்கும்.
பெண்களுக்கு, ஆண்கள் கொடுமைகள் இழைக்கும் பொழுது, அந்த ஆவேசம் இருக்கும்.
உணர்வுகளுடைய வெளிப்பாடு – உணர்வின் வேகம், புயல் –

இதுதான் சுயமரியாதை இயக்கம்!

அந்த ஆவேசம், அந்த உணர்வுகளுடைய வெளிப் பாடு; அந்த எரிமலையின் சீற்றம்; அந்த உணர்வின் வேகம், புயல் – இதுதான் சுயமரியாதை இயக்கம்.
அந்த சுயமரியாதை இயக்கத்தை ஓர் அறி வுப்பூர்வமாக, காட்டாற்று வெள்ளமாக வரக்கூடிய ஒன்றை – காற்றைத் தேக்கி, அணைக்கட்டி, மின்சாரத் தேக்கமாக ஆக்கி, அந்த மின்சாரத்தை அறிவுக்கும், வெளிச்சத்திற்கும், இருட்டை அப் புறப்படுத்துவதற்கும் ஆக்கினால் எப்படியோ, அப்படித்தான் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்பது உருவாகி, சீரிய பணி செய்தது. இந்த நாட்டில் எல்லோரும் படித்தார்களா? எல்லோரும் சமமாக இருக்கிறார்களா? ஆண் – பெண் பேதம் இருக்கக்கூடாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு – ஒரே வரி, பிறவி பேதத்தை ஒழிப்பது என்பதுதான் அதனுடைய குறிக்கோள்.
பிறப்பினால் பேதம்,
எந்த நாட்டில் இருக்கிறது?
பிறப்பினால் பேதம், எந்த நாட்டில் இருக்கிறது? பேதங்கள் இருக்கின்றன; அது வேறு, அது இல்லை என்று சொல்ல முடியாது. செல்வத்தினால் பேதம், மற்ற மற்ற பேதங்கள் இருக்கலாம். ஆனால், பிறக்கும்பொழுதே மேல்ஜாதிக்காரன் – முகத்தில் பிறந்த ஜாதி, காலில் பிறந்த ஜாதி என்று பிறவி பேதம்.

(தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *