“தினத்தந்தி” மேனாள் ஆசிரியர் அய். சண்முகநாதன் மறைவிற்கு இரங்கல்!

Viduthalai
1 Min Read
பத்திரிகைத் துறையில் 70 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ‘தினத்தந்தி’ ஏட்டின் மேனாள் ஆசிரியர் – அமைதியின் திருவுருவம் அய். சண்முகநாதன் (வயது 90) அவர்கள்  இன்று (3.5.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
அவரின் மறக்க முடியாத, என்றும் நிலைத்து நிற்கும் – ‘தினத்தந்தி’ குழுமத்தினரால் வெளியிடப் பட்ட “வரலாற்றுச் சுவடுகள்” என்ற நூல் ஒரு தகவல் களஞ்சியமாகும்.
2021ஆம் ஆண்டு “கலைஞர் எழுதுகோல்” விருது வழங்கப்பட்டவர்.
பிற்பகல் நேரங்களில் ஓய்வெடுக்க – ‘தினத்தந்தி’க்கு பக்கத்து அலுவலகமான ‘விடுதலை’ வளாகத்தில் தம் காரில் ஓய்வு எடுப்பவர் – அந்த அளவுக்கு நம்மிடம் நேசமும், பாசமும், உறவும் கொண்டவர்.
பழுத்த பத்திரிகைத் துறை அனுபவம் வாய்ந்த அவரின் மறைவு – பத்திரிகையாளர் உலகிற்கு மாபெரும் இழப்பாகும்.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், பத்திரிகையாளர் களுக்கும் கழகத்தின் சார்பிலும், விடுதலைக் குழுமத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
ஆசிரியர் ‘விடுதலை’
3.5.2024
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *