சென்னை, மே 3- “தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் மே 2-ஆம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத் தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்” என போக்குவரத்து காவல் கூடு தல் ஆணையர் ஆர். சுதாகர் ஏப்ரல் 27 அன்று சுற்றறிக்கை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் சம அளவில் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் மட்டும் ஊடகம், காவல்துறை, மருத்துவர், வழக்குரைஞர், உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், ஆர்மி என தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து காவல்துறையினர் அனுமதி அளித்தனர். அதேநேரம் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை மே 2 முதல் அமலுக்கு வந்துள்ளது.