தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் வழங்க கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

தூத்துக்குடி, மே 3- 2.5.2024 அன்று தூத் துக்குடியில் மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத்தலைவர் மு.முனியசாமி தலைமையில், காப்பாளர்கள் மா.பால்இராசேந்திரம், சு.காசி, ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.முருகன் வரவேற்புரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நோக்கவுரையாற்றினார் அய்ந்து சந்தாக்களை சேர்த்து தருகிறோம் எனக்கூறி ஒவ்வொருவரும் சந்தா புத்தகங்களை பெற்றுக் கொண்டார்கள்.

மாவட்ட திராவிடர் கழகம் 100 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

கழகப்பேச்சாளர் இராம.அன் பழகன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.ஆழ்வார், மாநகர தலைவர் செல்லத்துரை, மாவட்ட ப.க.செயலாளர் மதிவாணன், முத்தையாபுரம் பகுதி தலைவர் செல்வராசு, விளாத்திகுளம் ஒன்றி யத்தலைவர் பாலமுருகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செ.நவீன் ஆகியோர் கருத்துரை யாற்றினார். மாவட்ட இளைஞ ரணி தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *