பெருந்துறை, மே 3 – “சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற் றாண்டு” தொடங்கியதை முன் னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந் துறை பழைய பேருந்து நிலையம் அருகில் 2.5.2024 அன்று மாலை 6 மணிக்கு நூற்றாண்டு தொடக்க விழா கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செய லாளர் நா.மோகன்ராஜ் தலைமை தாங்கினார், பவானி அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். கழகப் பேச்சாளர் கோபி வெ. குமாரராஜா, தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண் முகம் ஆகியோர் “சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் வேர்ட் பிரஸ் தந்தை பெரியார் தொடங்க வேண்டிய அக்கால தேவை பற்றியும், அதனால் தமிழ்ச் சமூகம் பெற்ற பயனையும் – இன்றும் முன்பை விட அவற்றின் தேவை அதிகம் என்பதை சிறப்பாக விளக்கினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் இரா. நற்குணன், மாவட்ட செய லாளர் மா.மணிமாறன், மாநகர செயலாளர் தே.காமராஜ், தங்க ராஜ், சீனி மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய இளைஞரணி செயலாளர் அன்பு பிரசாந்த் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.