மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய ஆணை

Viduthalai
1 Min Read

சென்னை,மே 3- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தாகமுள்ள மக்க ளுக்கு தண்ணீர் பந்தல் திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் கோரிக் கைக்கு இணங்க தேர்தல் நடத்தை விதிகளின் அடிப் படையில் தண்ணீர் பந் தல் திறக்க எந்த ஆட்சேப னையும் இல்லை. தண் ணீர் பந்தல் அமைப்பதன் வாயிலாக எந்தவொரு அரசியல் ரீதியான செயல் பாட்டிலும் ஈடுபடக் கூடாது. தண்ணீர் பந்தல் திறப்பின்போது தேர்தல் நடத்தை விதிகள் கண் டிப்பாகக் கடைப்பிடிக் கப்பட வேண்டும்.

தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் எந்த வொரு அரசியல் கட்சி யும், வேட்பாளரும், ஆணை யத்தின் மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங் கத்தின் பிற அறிவுறுத்தல் களைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் கட் சிகளின் கோரிக்கையின் அடிப்படையிலும் தேர் தல் நடத்தை விதிகளைப் பின்பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதிக்கலாம்.
அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அவரவருடைய எல்லைக் குள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண் ணீர் பந்தல் செயல்பாடு கள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *