தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்

Viduthalai
1 Min Read

சென்னை, மே 3- பிராட்வே பேருந்து நிலையம் தற் காலிகமாக தீவுத்திட லுக்கு இடமாற்றம் செய் யப்பட உள்ளது.
பிராட்வேயில் ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனை யம் அமைக்கும் பணிக் காக அடுத்த சில மாதங் களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலை யம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.

அதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனை யம் அமைக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலை யம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலை யம் அமைக்கப்பட உள்ளது.
குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடி கள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள் ளது. இங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக் கும் வகையில் நடை மேம் பாலம் அமைக்கப்பட வுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *