பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதா?

1 Min Read

கோவில் விழாவில் மோதல்: கடைகளுக்குத் தீ வைப்பு காவல்துறை தடியடி!

சேலம், மே 3- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று (2-5-2024) நடைபெற்ற திருவிழாவில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலில் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் மோதலாக மாறியது.

இந்த மோதல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவில் திருவிழா நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள கடைகள் மற்றும் வாகனங் களுக்கு மோதலில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததால் அப்பகுதி கலவரம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது காவல் துறையினர் மீதும் கல் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது தீவட்டிப்பட்டி முழு வதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் அப்பகுதியில் இருந்து அப்புறப் படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மோதலின் காரணமாக கோவில் திருவிழா நிறுத்தப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *