திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு இல்ல மணவிழா

1 Min Read

திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் மறைந்த சு.அறிவுக்கரசு அவர்களின் பெயரனும், நினைவில் வாழும் ப.இராமதாசு – அ.பொன்எழில் ஆகியோரது மகனுமான பொ.இரா.செங்கோ, செங்கல்பட்டு மாவட்டம் இராஜகீழ்பாக்கம் எஸ்.வெங்கட்ராமன் – துளசி ஆகியோரது மகள் வெ.ரம்யா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் செந்தில்குமாரி, முனைவர் த.ஜெயக்குமார், பொறியாளர் அ.மணிநிலவன், இர.அ.இளவேனில் மற்றும் குடும்பத்தினர், கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சென்னை-பெரியார் திடல் அன்னை நாகம்மையார் அரங்கில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையேற்று உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார். மதிமுக கொள்கை விளக்க செயலாளர் ஆ.வந்தியத்தேவன் இணையரை வாழ்த்தி புத்தகங்களை வழங்கினார் (சென்னை, 3.5.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *