தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை!

1 Min Read

80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி!

சென்னை, மே 3- தமிழ்நாடு முழுவதும் 23 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வரும் கல்வி ஆண்டுக்குள் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க பள்ளிக்கல்வித் துறை திட்ட மிட்டுள்ளது. வரும் ஜூன் மாதத் துக்குள்50 சதவீத பணிகள் நிறை வடையும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வரை 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட்வகுப்பறைகள் அமைக்கப்பட் டுள்ளன. மேலும், அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.
இதுதவிர 8 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு அகண்ட அலைவரிசை இணையதள இணைப்புகள் வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *