கோட்டைக்குள் குத்துவெட்டு! தேர்தல் பணத்தை சுருட்டியதாக ஆத்தூரில் பி.ஜே.பி. தலைவருக்கு எதிராக சுவரொட்டி

2 Min Read

ஆத்தூர்,மே 2- சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவருக்கு எதி ராக அக்கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே முதற்கட்ட மாக தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணி யில் பாமக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இந்தவகையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாஜ தலைவர்கள் தேர்தல் பொறுப் பாளர்களாகவும் செயல்பட்டனர்.
இவர்களுக்கு தேர்தல் செலவி னம் என்ற பெயரில் கட்சித் தலைமை ஒரு பெரும் தொகையை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பணத்தை பெற்று கொண்ட மாவட்ட தலைவர்கள், அதை செலவிடாமலும், தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்காமல் அமுக்கி கொண்டதாகவும் மாநிலம் முழுவ தும் புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட தலை வர்கள் மீது புகார் தெரிவித்து பாஜவினர் பரபரப்பு சுவரொட்டி களையும் ஒட்டி வருகின்றனர்.
அந்தவகையில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சண்முக நாதன் குறித்து ஆத்தூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவரொட்டியில், ‘‘பணத்தை கொள்ளையடித்த மாவட்ட தலை வர் சண்முகநாதனை பதவியில் இருந்து நீக்கு. பாஜ கூட்டணியின் வெற்றிக்கு உழைக்காமல் எதிர்க் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து, நமது கட்சி நிர்வாகிகளை மாற்று கட்சிக்கு ஓட வைத்த சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதனை பதவியை விட்டு நீக்கு’’ என்று குறிப் பிடப் பட்டுள்ளது.
சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள ஆத்தூர் கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற தொகுதிக்கு உட்பட்டது. இங்கு பாஜ கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளராக தேவதாஸ் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சண்முகநாதனிடம் கேட்டபோது, ‘‘எங்கள் கட்சியை பொறுத்தவரை தனிப்பட்ட நபரி டம் வரவு, செலவுகளை ஒப்படைப் பது கிடையாது. கட்சி மேலிடம் அமைத்துள்ள மய்யக்குழு மூலமே செலவினங்கள் அனைத்தும் வழங் கப்படுகிறது.
அப்படிப்பட்ட நிலையில் எனக் கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்ப டுத்தும் வகையில் திட்டமிட்டு விஷமிகள் சுவரொட்டி ஒட்டியுள் ளனர். இது குறித்து ஆத்தூர் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளேன்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *