சென்னை, மே 2- குரூப் 1 தேர் வில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் வெற்றி பெற்றுள்ள நிலை யில், படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை, முயன்றால் படித்து முன்னேறலாம்; வெற்றி முகட்டைத் தொடலாம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதாக சிறீமதி அவர் களின் வாழ்க்கையும், அவரது விடாமுயற்சியும் வழிகாட்டு கின்றன என முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:
“தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத் தில் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விண் ணப்பித்தவர்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நடை பெற்றது. அதன் முடிவுகள் கடந்த 2023 ஏப்ரல் மாதம் வெளியானது.
இதைத் தொடர்ந்து, குரூப் 1 முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன. அதில், 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் கலந்து கொண்டு தேர்வை எழுதினர்.
இதில் 90 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். இந்த குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்ட மான, நான் முதல்வன் திட்டத் தில் பயிற்சி பெற்றுத் தேர்ச்சி பெற்றவர் என்ற செய்தி வெளி யாகி நான் முதல்வன் திட்டத் தின் வெற்றியைப் பறைசாற் றியது.
இம்முறை குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர் மிகவும் ஏழ்மையான நிலையில் தனது சொந்த முயற்சியில் வீட் டிலிருந்தே படித்து வெற்றி பெற்றுள்ளனர் எனும் செய்தி கள் வந்தவண்ணம் உள்ளன.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகின்ற மூன்று பெண் ஊழியர்கள் ஒரே நேரத்தில் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளனர்.
அதேபோல, தென்காசியைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளி ஒருவரின் மகள் சிறீமதி என்பவ ரும் இந்த குருப் 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வசதி இல்லா ததால், வீட்டிலிருந்தே படித்துள் ளார். இவர் ஏற்கெனவே இரண்டு முறை குரூப் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. எனினும், சிறீமதி விடாமுயற்சி யுடன் 3ஆவது முறையாக குரூப் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற் றுள்ளார்.
26.4.2024 முதல் தொடங்கும் நேர்காணலில் பங்குபெறவிருக் கும் இவர் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக யுள்ள துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணை யர் ஆகிய பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தேர்வு செய்து அதிகாரி யாகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை, முயன்றால் படித்து முன்னேறலாம். வெற்றி முகட் டைத் தொடலாம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதாக சிறீமதி அவர் களின் வாழ்க்கையும், அவரது விடாமுயற்சியும் வழிகாட்டுகின்றன.
மே முதல் நாள் தொழிலாளர் திருநாள். பீடி சுற்றும் ஒரு தொழிலாளியின் மகள் சிறீமதி விடாமுயற்சியுடன் படித்து, வென்று உயர் அதிகாரியாகப் பொறுப்பேற்கவிருக்கும் செய்தி அனைவருக்கும் முன்னுதாரன மாக அமைந்துள்ளது. மே நாள் வாழ்த்துகளை சிறீமதிக்கும் அவ ருடைய பெற்றோருக்கும் அனை வரும் கூறி, பாராட்டுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.