கிழக்காசிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெயில்… இந்தியாவில் அதிகபட்சமாக 44 டிகிரி வெப்பம் பதிவு

1 Min Read

சிங்கப்பூர், மே 2- கிழக்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசுகின்றது. கடந்த வாரம் அதிகபட்சமாக மியான் மரில் 113 டிகிரி (45 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தாய் லாந்து மற்றும் இந்தியாவில் 112 டிகிரி வெயில் பதிவானது.
பங்களாதேஷில் 109 டிகிரியும், லாவோஸ் வியட்நாம் மற்றும் நேபாளில் 108 டிகிரியும் வெப்பம் பதிவானது.
சீனாவில் 107 டிகிரியும், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் 98 டிகிரிக்கு சற்று கூடுதலாகவும் வெப்பம் பதிவானது.
கிழக்காசிய நாடுகள் அனைத் திலும் கடந்த வாரம் கடும் வெப்பம் பதிவான நிலையில் இந்தோ னேசியாவில் அதிகபட்சமாக 91 டிகிரி வெயில் பதிவானது.
வெப்பம் மற்றும் அனல்காற்று காரணமாக மக்கள் பெருமளவு வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக் கும் நிலையில் கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *