பா.ஜ.க.வின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு!

viduthalai
3 Min Read

குமரி, மே 2 – ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்யும் பாஜகவுக்கு மக்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக ஆட்சி செய்த ஆண்டுகளில் மக்கள் விரோத செயல்களில் மட்டுமே பாஜக ஈடு பட்டு வந்தது.

இதனை பலரும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வரு கின்றனர். அந்த வகையில் பிரபல யூ-டியூபர் துருவ் ரதி என்பவரும் பா.ஜ.க.வின் வண்டவாளத்தை எல்லாம் மக்களுக்கு தெரியப் படுத்தி வருகிறார்.
அண்மையில் பாஜகவின் தேர் தல் பத்திர ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத் திய நிலையில், பலரும் பாஜகவின் ஊழல் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

அதில் துருவ் ரதியும் ஒருவர். இவர் பாஜகவின் ஒட்டுமொத்த தேர்தல் பத்திர ஊழல் குறித்து அம்பலப்படுத்தியிருந்தார்.
இவரது காட்சிப் பதிவும் இணையத்தில் பெரும் வைரலா னாது. இதைத்தொடர்ந்து மேலும் பாஜக அரசின் கொடுமைகள் குறித்தும் காட்சிப் பதிவுகள் மற் றும் கருத்தை பதிவிட்டு வருகிறார்.

இதனாலே ஊடகவியலாளர் துருவ் ரதிக்கு என்று தனி Follower -கள் உள்ளனர். இவரது ஒரு காட்சிப் பதிவு பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்ச பார் வையாளர்களை கடந்து வருகிறது.

பாஜகவின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டு துருவ் ரதிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தற்போது அமைச்சர் மனோ தங்கராஜும் தனது பாராட்டுகளை தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள சமூக வலைதள பதிவு வரு மாறு :

“ஜனநாயகத்தின் நான்காம் தூணாக கருதப்படும் ஊடகத் துறை இந்தியாவில் பாஜக வால் மிரட்டப்படுகிறதா? இல்லை தன் ஜனநாயக கடமையிலிருந்து விலகி சார்பு நிலைக்கு சென்று விட்டதா என்ற அய்யம் எழுந்துள்ளது.
1. இந்திய வரலாற்றிலேயே மிக பெரிய ஊழலாலான சிஏஜி அறிக் கையில் குறிப்பிடப்பட்ட ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து பேச வில்லை.
2. இந்தியாவின் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்த ரஃபேல் ஊழல் குறித்து பேச வில்லை.
3. இந்திய வங்கிகளை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பெரும் பணக்காரர்களை மோடி தடுக்காதது குறித்தும் அவர்களை மீட்டு வராதது குறித்தும் பேச வில்லை.
4. பணமதிப்பிழப்பு நடவடிக் கையால் ஏற்பட்ட இழப்பு எவ் வளவு என்பது குறித்து ஊடகங்கள் பேசவில்லை.
5. இந்தியாவிற்கு சொந்தமான 96 லட்சம் ஏக்கர் நிலம் சீனா ஆக்கிரமித்திருப்பது குறித்து ஊடகங்கள் பேசவில்லை.
6. அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக மதப் பிரிவினையை தூண் டும் விதமாகப் பேசும் மோடியின் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஊட கங்கள் பேசவில்லை.
7. அரசுக்கு வருமான வரி செலுத்தாமல் இருக்க, பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் என்ற பெயரில் நன்கொடை வழங்கிய நிறுவனங் கள் குறித்து ஊடகங்கள் பேச வில்லை.
8. மோடியின் நண்பர்களின் வளர்ச்சிக்காக இந்தியாவின் இயற்கை வளங்களை அழிக்க சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்தி யது குறித்து ஊடகங்கள் பேச வில்லை.
9. நாடு நாடாக சுற்றிய மோடிக்கு மணிப்பூருக்கு செல்ல முடியாதது ஏன், மணிப்பூரில் காவல்துறையின் 3000 ஆயுதங் களை கொள்ளையடித்த கலவரக் காரர்கள் மீதும் குற்ற செயல்கள் மீதும் என்ன நடவடிக்கை எடுக் கப்பட்டது என்பது குறித்து ஊடகங்கள் பேசவில்லை.
இப்படி எத்தனையோ.
முன்பு பேசிய என்.டி.டி.வி. அதானியால் கொள்முதல் செய்யப் பட்டதுடன் தன் கடமையை முடித்துக்கொண்டது. ‘மிரர் நவ்’ ஊடகத்தில் பேசிய பெய்டி சொய்சா போன்றோர் வெளியேற் றப்பட்டனர்.
பல முதன்மை ஊடகதாரர்கள் ஊடகங்களை விட்டு வெளியேற் றப்பட்டனர். இந்நிலையில், அத் தனை ஊடகங்களும் இணைந்து இந்திய ஜனநாயகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை தனி ஒரு ஆளாக முதுகெலும்புடன் ஆற்றி வரும் துருவ் ரதிக்கு வாழ்த்துகள்!” இவ்வாறு கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *