தஞ்சை மாநகர திராவிடர் கழக புதியப் பொறுப்பாளர்கள் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்

0 Min Read

புதியதாக தஞ்சை மாநகர பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள – மாநகரத் தலைவராக பா.நரேந்திரன், மாநகரச் செயலாளராக செ.தமிழ்ச்செல்வன், மாநகரத் துணைத் தலைவராக அ.டேவிட், மாநகர இணைச்செயலாளராக இரா.வீரக்குமார், மாநகரத் துணைச்செயலாளராக இரா.இளவரசன் ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு பயனடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு பழனிவேல், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் ஆகியோர் உள்ளனர். (30.4.2024 தஞ்சை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *