கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

2.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்
* ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? மோடியின் ‘அரசியல் குடும்பத்தில்’ அங்கம் வகிப்பது குற்றவாளி களுக்கு ‘பாதுகாப்பு உத்தரவாதமா’? ராகுல் காந்தி சரமாரி கேள்வி
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்யாவிடில், ஹிந்து திருமணங்கள் செல்லாது, உச்ச நீதிமன்றம்.
தி இந்து:
* வரவிருக்கும் தோல்விக்கு பயந்து ‘400′ முழக்கத்தை பாஜக தவிர்க்கிறது என அகிலேஷ் தாக்கு.
* தேர்தல் பேரணியில் பிரதமர் மோடியின் பழைய பேச்சுகள் மறு ஒலிபரப்பு (ரீவைண்ட்) செய்து பிரதமர் போன்ற உயரிய தலைவர் பொது வாழ்வில் இதுபோன்ற பொய்களை பேசக்கூடாது என தேஜஸ்வி கண்டனம்.
* மணிப்பூர் குழுக்கள் இன மோதலின் ஒரு ஆண்டைக் குறிக்கும் நிகழ்வுகளை மே 3ஆம் தேதி நடத்துகின்றன. குகி-ஸோ அமைப்பு சுராசந்த்பூரில் பணி நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “மோடியை வெளியேற்றுவோம்; நாட்டை காப்பாற்றுவோம்” (‘மோடி ஹடாவோ, தேஷ் பச்சாவோ’) என்ற முழக்கத்தோடு, அரசமைப்பு, ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டும் என மல்லி கார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
தி டெலிகிராப்:
* ஏழைகள் மற்றும் அதிகாரம் அற்றவர்களிடம் அய்ந்து கிலோ ரேஷனுக்கு தீர்வு காணச் சொல்வதும், அய்ந்து விமான நிலையங்களை அபகரிக்க கூட்டாளிகளை அனுமதிப்பதும் மற்ற எல்லா வகையான சமத்துவமின்மை யையும் மோடி அரசு மோசமாக்குகிறது என்கிறார் அரசியல் விமர் சகர் பரகலா பிரபாகர்.
* நாடு முழுவதும் விற்கப்படும் குஜராத் மாடல் என்பது ஒரு மாயை; உண்மையல்ல. கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் போன்ற உண்மையான பிரச்சினைகள் குஜராத் மாதிரியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் என்று அழைக்கப்படு வதில் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்கிறார் கவிஞரும், திரைப்படத் தயாரிப்பாளருமான மெகுல் தேவ்கலா
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *