ஆவடியில் திராவிட தொழிலாளர் கழகம் சார்பில் கொடியேற்றி ‘மே நாள்’ விழா

Viduthalai
1 Min Read

ஆவடி, ஏப். 2- மே நாளை முன்னிட்டு 1-5-2024 புதன்கிழமை காலை 9-30 மணிக்கு ஆவடியில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாவட்ட தலைவர் வெ.கார்வேந் தன் தலைமையில் செயலாளர்
க.இளவரசன் முன்னிலையில் கொடுங்கையூர் கோ.தங்கமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி தலைவர் கி.ஏழுமலை திராவிட தொழிலாளர் கழகக் கொடியை தோழர்களின் வாழ்த்து முழக்கங்களிடையே ஏற் றினார்.

நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் ரகுபதி, துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன், செய லாளர் க.கார்த்திக்கேயன், துணை தலைவர் ஜெயராமன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் அசோகன்,கோயில் பதாகை பகுதி தொழிலாளர் அணி தலைவர் செல்வமணி, செயலாளர் சீனிவாச ராகவன், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், ஆவடி நகர தலைவர் முரு கன், துணை தலைவர் சி.வச்சிர வேல், பட்டாபிராம் பகுதி தலைவர் வேல்முருகன், அம்பத்தூர் பகுதி செயலாளர் அய்.சரவணன், கன் னடபாளையம் தமிழரசன், அரி கிருஷ்ணன், மா.தமிழ்ச்செல்வன், வை.கலையரசன், பழ.நல்.முத்துக் குமார் ஆகியோர் கலந்து கொண் டனர்.
இறுதியாக மாவட்ட தொழிலா ளர் அணி தலைவர் கி.ஏழுமலை தலைமையில் ஆவடி பெரியார் மாளிகையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *