இப்படியும் ஒரு மூடத்தனம் துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் திருவிழாவாம்

1 Min Read

ஆண்டிப்பட்டி,மே 2- ஆண்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் சேற்றில் நனைத்த துடைப் பத்தை கொண்டு கிராம மக்கள் அடித்துக் கொள் ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பொங்கல் வழி பாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொதுவாக விழாவின் கடைசி வழக்கமாக கிராமத்தில் உள்ள மக்கள் தங்களின் மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி கொண்டாடுவார்கள். ஆனால் இந்த கிராமத்தில் விழாவின் கடைசி நாளில் கிராம மக்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதமான நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று (1.5.2024) கிராமத்தில் உள்ள மக்கள், தங்களின் மாமன், மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அடிப்பதற்கு முன்பாக துடைப்பத்தை சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியிலும் நனைத்துக் கொண்டு அடித்துக் கொண்டனர். மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடி வாங்கிக் கொண்டனர். பக்தி, பழக்க, வழக்கத்தின் பெயரால் இப்படியும் ஒரு மூடத்தனம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *