பெரம்பலூர். ஏப்.30– சமுதாய வளர்ச் சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண் களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது, ரூபாய் 1,00,000 ரொக் கம் பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக் கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2024ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2024 அன்று நடை பெறும் சுதந்திரதின விழாவில் வழங்கப் படவுள்ளது.
இவ்விருது தொடர்பாக கீழ்க் காணும் தகுதிகள் வரையறுக்கப்பட் டுள்ளன. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கவும். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, 2023 (01.04.2023) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31ஆம் தேதி, 2024 (31.03.2024) அன்று 35 வயதுக்குள் ளாகவும் இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 01.04.2023 முதல் 31.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்தவ ராக இருத்தல் வேண்டும்.
(சான்று இணைக்கப்பட வேண்டும்.) விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக் காக தன் னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அள விடக் கூடியதாகவும் இருத்தல் வேண் டும். ஒன்றிய / மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் பல்கலைக்கழ கங்கள் / கல்லூரிகள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக் களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப் படும்.
விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத் தில் 01.05.2024 முதல் கடைசி நாள் 15.05.2024 மாலை 4.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.
இணையத்தில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் நகல் மற்றும் உரிய ஆவணங்கள் 3 நகல்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, காவல் துறையிட மிருந்து சரிபார்ப்பு சான்றிதழ் ஆகிய வைகளை 18.05.2024 மாலை 4.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.