மேட்டுப்பாளையம், ஏப்.30- மேட் டுப்பாளையம் அடுத்துள்ள தேக் கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணை யருமான கைலாசமூர்த்தி மேட்டுப் பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித் திருந்தார்.
அந்த புகார் மனுவில், வனபத்ர காளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்ட பாணி, விஷ்ணு குமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளதாகவும், அதனை அறங்காவலர் வசந்தா சம் பத் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந் துள்ளதாகவும், அதனால் சம்பந் தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதனையடுத்து நீதிமன்ற அறி வுறுத்தலின்படி மேட்டுப்பாளை யம் காவல்துறையினர் வனபத்ர காளியம்மன் பரம்பரை அறங் காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 3-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினரின் விசார ணையில் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண் டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய் தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட கோவில் பூசாரி ரகுபதி பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிகழ்வு தொடர்பாக பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் நீதிமன்றத்தில் முன் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவரது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வன பத்ர காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக் கைகளை கையாடல் செய்த விவ காரத்தில் 4 பூசாரிகள் கைது செய் யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.