குடியாத்தம், ஏப். 30- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச கோடைக் கால சதுரங்கப் பயிற்சி முகாம் துவக்க விழாவும் மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவும் 26.4.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு குடியேற்றம் புவனேஸ்வரி பேட்டை பெரியார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இலவச சதுரங்க பயிற்சி சரியாக ஒரு மாதம் நடத்துவதாக வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தோழர்களால் திட்டமிடப்பட்டு அதன் துவக்கவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப் பாளர் வே.வினாயமூர்த்தி தலைமை தாங்கினார், வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைச் செயலாளர் ஆசிரியர் பி.தனபால் அனைவரையும் வரவேற்றார். வேலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் பொறிஞர் க.சையத் நிகழ்ச்சியை ஒருங் கினைத்தார், வேலூர் மாவட்ட திரா விடர் கழக தலைவர் வி.இ.சிவக்குமார், நகர கழக தலைவர் சி .சாந்தகுமார், நகர கழக அமைப்பாளர் வி.மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் இ. தமிழ்தரணி, குடியாத்தம் நகர கழகம் ஓவியர் பரமசிவம் மற்றும் பகுத்தறிவா ளர் கழகம் கே.எஸ்.அஷ்ரப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பேராசிரியர் வே. வினாயகமூர்த்தி ஆற்றிய தலைமை உரையில் பகுத்தறிவாளர் கழகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. பகுத்தறிவு சிந்தனையை வளர்க்க பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி, இலக்கியம் மற்றும் உளவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்று பேசினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர. அன்பரசன் ஆற்றிய தொடக்க உரையில் பெற்றோர் தங் களது குழந்தைகளுக்கு ஒழுக்கம் சார்ந்த கருத்துகளை திணிப்பதை விட பெற் றோர்களே தங்களது பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும், தந்தை பெரியார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் களின் சமூகப் புரட்சி கருத்துக்களை ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் இருட்டடிப்பு செய்கிறார்கள். ஆகவே, இதுபோன்ற எண்ணம் கொண்டவர் களின் பொய் பிரச்சாரங்களை தகர்த்தி பகுத்தறிவாளர் கழகம் மாணவர்களி டையே பகுத்தறிவு சிந்தனையை வளர்த்து வருகிறது என்று பேசினார்.
வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் வி.சடகோபன் இந்த பயிற்சி முகாமை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கண்டு தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தனது வாழ்த்துரையில் குறிப் பிட்டார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் அவர்கள் சதுரங்க பயிற்சி முகாமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது, தந்தை பெரியார் அவர்களின் கொள் கையை பறைசாற்றும் விதமாக செயல் படும் பகுத்தறிவாளர் கழகம், பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம் படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இலவச கோடைக்கால சதுரங்க பயிற்சி முகாமை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். தந்தை பெரியார் அவர்கள் ஜாதி, மத வேறுபாடுகளை ஒழிக்க தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். இளைஞர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அறிவியலுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளை அகற்றிட இது போன்ற விளையாட்டு பயிற்சி முகாம் கள் பேருதவியாக இருக்கும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில் பெற்றோர் தந்தை பெரியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றவர்களின் பெய ரால் நடத்தப்படும் கட்டுரை, கவிதை போட்டிகளில் தங்களது பிள்ளைகள் பங்கேற்று முதல் பரிசை பெற வேண்டும் என்ற நோக்கில் அவர்களை ஊக்கப் படுத்துகிறார்ளே தவிர, இந்த புரட்சி யாளர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பின் பற்றுவதில் தங்களது பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருப்பதில்லை என் றும் பேசினார்.
முன்னதாக புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்களின் பிறந்த நாள் முன் னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகம் சார்பில் அவரது உருவப் படத்திற்கு மாலையிடப்பட்டது. இந்த சதுரங்க பயிற்சி முகாமில் 60க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் தங்களது பெயர் களை பதிவு செய்து முகாமில் பயிற்சி பெற அவர்களது பெற்றோருடன் வந் திருந்தனர்.
இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பயிற்சி முகாம் முடிவில் பகுத்தறிவாளர் கழகம் பா.ஜீவானந்தம் நன்றியுரை ஆற்றினார்.