பிரதமர் தகுதிக்கு இப்படிப் பேசலாமா? பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்

viduthalai
2 Min Read

சென்னை, ஏப்.29- பிரதமர் மத வெறுப்பு பேச்சின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தேர்தல் ஆணையம் கடும் நடவ டிக்கை எடுத்து தன்னுடைய நடுவு நிலையை நிரூபிக்க வேண்டும் என்றும், இந்தியத் தேர்தல் ஆணையம் இதை அமைதியாக கடந்து போனால் அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள் விக் குறியாகிவிடும் என்றும் ஜவா ஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
மிக முக்கிய கோரிக்கை ஒன்றையும் தேர்தல் ஆணையத்துக்கு விடுத்துள் ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினரு மான பேராசிரியர் எம்.எச். ஜவா ஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:

“ராஜஸ்தான் மாநிலத்தில் நடை பெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர் குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார்.

“அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப் பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பா தித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா…
மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச் செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது.
இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது” என்றெல்லாம் கேடுகெட்ட முறையில் ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்ட தில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை. நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் வெறுப்புப் பரப்புரையா ளராக மாறியுள்ளார்.
குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வும் பிரதமரான பிறகும் சற்றும் கரைய வில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை.
அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண் டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இதை இந்தியத் தேர்தல் ஆணையம் அமைதியாகக் கடந்து போனால் அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவ டிக்கை எடுத்திடவேண்டும் என ம.ம.க. வலியுறுத்துகிறது,” என்று குறிப்பிட் டுள்ளார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *