சென்னை, ஏப்.29- மே மாதம் 15ஆம் தேதி வரை கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன இவற்றில் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப் புவதற்கான அறிவிப்பு கடந்த 2019ஆ-ம் ஆண்டு வெளியிடப் பட்டு நீதிமன்ற வழக்குகளால் நடக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள், 79 பின்ன டைவு காலிப் பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டது. இதற் குத் தகுதியுள்ள விண்ணப்பதா ரர்கள் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இன்றுடன் (29.4.2024) அவ காசம் நிறைவு பெற இருந்த நிலையில், இணையவழி வாயி லாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக் கப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள் ளது. இந்தப் பணியிடங்களுக் கான போட்டித் தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தேர்வுக்கு முன்ன தாக உதவிப் பேராசிரியர்களுக்கு நடத்தப்படும் மாநில தகுதித் தேர்வில் (செட்) கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. செட் தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது.