சென்னை, ஏப். 29- சென்னை இரண்டாம் கட்ட, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒதுக்காதது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த தி.மு.க.ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒதுக்காதது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்காதது தெரியவந்துள்ளது. சென்னைமெட்ரோ ரயில் 2-ஆம் கட்டதிட்டத்திற்கான முன்மொழிவு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது.
இன்னும் 2 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டப்பணிகள் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்இது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.