மோசடிக்காரர்களுக்கு உதவும் ஏ.அய். குரல் குளோனிங்! எச்சரிக்கை!!

viduthalai
3 Min Read

சென்னை, ஏப். 29 – ஏஅய் குரல் குளோனிங் பயன்படுத்தி செய்யும் ஆள்மாறாட்ட மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சைபர் மோசடி செய்பவர், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அவசர தொலைபேசி அழைப் புகளில் குடும்ப உறுப்பினர்கள் போன்ற நம்பகமான நபர்களின் குரல்களை பிரதி பலிக்கும் வகையில் குரல் குளோனிங்கை பயன்படுத்துகிறார். அவசர உணர்வை உருவாக்குவதன் மூலம், பாதிக்கப்பட்டவர் களின் நம்பிக்கையையும் உணர்ச்சிகளையும் சுரண்டி விரைவாக பணத்தை அனுப்பும்படி ஏமாற்றுகிறார்.

இந்த ஏமாற்றும் தந்திரம் சைபர் கிரை மின் வளர்ச்சியடைந்து வரும் அதிநவீனத்தை எடுத்துக் காட்டுகிறது. இதுபோன்ற மோசடி திட்டங்களுக்கு பலியாகாமல் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது?

பாதிக்கப்பட்ட வருக்குத் தெரிந்த குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் போல் காட்டிக்கொண்டு, மோசடி செய்பவரிட மிருந்து பாதிக்கப்பட்டவருக்கு தொலை பேசி அழைப்பு வருகிறது.
மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவருக்கு அவசர உணர்வை தூண்டுவதற்கு பல்வேறு தந்திரங்களை பயன்படுத்துகிறார். உடனடி உதவி தேவைப்படும் இக்கட்டான சூழ் நிலையில் இருப்ப தாகக் கூறி, அழுது கொண்டே அல்லது கெஞ்சும் தொனியைப் பயன்படுத்துகிறார்.

மோசடி செய்பவர், தான் ஆள் மாறாட்டம் செய்யும் நபரின் குரலை குளோன் செய்ய அதிநவீன செயற்கை நுண் ணறிவு (ஏஅய்) மென்பொருளைப் பயன் படுத்துகிறார்.
அதற்கு, ஆள்மாறாட்டம் செய்யப்படும் நபரின் குரல் மாதிரியை அவர்களின் சமூக ஊடக இடுகை/காட்சிப் பதிவுகள் மூலம் பெறுகிறார்கள். இந்த தொழில் நுட்பம் பாதிக்கப்பட்டவரின் நம்பகமான தொடர் பின் குரல், உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சி நுணுக்கங்களை நம்பத்தகுந்த வகையில் பிரதிபலிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், சைபர் குற்றங்களைச் செய்வதற்கு ஏஅய் (செயற்கை நுண்ணறிவால்) குரல் குளோனை உருவாக்கி பயன்படுத்துகிறது.

அவர்கள் அவசர உணர்வு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தியவுடன், மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரை உடனடி யாக பணத்தை மாற்றுமாறு கோருகிறார். பரிவர்த்தனையை விரைவுப்படுத்த யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (யுபிஅய்) போன்ற வேகமான மற்றும் வசதியான கட்டண முறைகளைப் பயன்படுத்துமாறு அவர் பரிந்துரைக்கிறார். அக்கறையாலும், நேசிப்பவருக்கு உதவ வேண்டும் என்ற ஆர் வத்தாலும் பாதிக்கப்பட்டவர், அழைப்பாள ரின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் மோசடி செய்பவரின் கோரிக்கைகளுக்கு இணங்குகிறார்.

பணப்பரிமாற்றம் முடிந்த பிறகு, பாதிக் கப்பட்டவர் தங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை தொடர்பு கொள்ள முயலும் போது தான் ஏமாற்றப்பட்டதை உணருகிறார்.
இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சைபர் கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய்குமார் கூறியதாவது:
அழைக்கும் நபரின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும். ஏதேனும் நட வடிக்கை எடுப்பதற்கு முன், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த, அறியப் பட்ட, சரி பார்க்கப்பட்ட எண்ணின் மூலம் அழைக்கப்படும் அழைப்பாளரை தொடர்பு கொள்ளவும். குரல் குளோனிங் மோசடி உட்பட பொதுவான மோசடிகளைப் பற்றி தொடர்ந்து அறிந்திருங்கள்.
முக்கியமான உரையாடல்கள் அல்லது பரிவர்த்தனைகளில் ஈடுபடும் முன் அழைப் பாளர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க, செய்தியிடல் பயன்பாடுகள் அல்லது காட் சிப் பதிவு அழைப்புகள் போன்ற பாதுகாப் பான தகவல் தொடர்பு சேனல்களைப் பயன்படுத்தவும். தெரியாத எண்களிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளைப் பெறும் போது எச்சரிக் கையாக இருங்கள்.

நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளா கியிருந்தால், உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930அய் டயல் செய்து சம்பவம் குறித்து புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in <https://www.cybercrime.gov.in> என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரல் குளோனிங் என்றால் என்ன?

வெறும் மூன்று அல்லது நான்கு வினாடிகள் ஆடியோ உள்ளீடு மூலம், குரல் குளோனிங் தொழில்நுட்பம் யாருடைய குரலையும் மீண்டும் உருவாக்க முடியும். பாதுகாப்பு மென்பொருள் நிறுவன மான மெக்காஃபி மதிப்பீட்டின்படி, அசலுக்கு 85 சதவீத குரல் பொருத்தம் கொண்ட குளோனை உருவாக்க, ஒரு அடிப்படை அனுபவமும் நிபுணத்துவமும் மட்டுமே தேவை என்பது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விஷயமாகும்.
இப்போது, மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற இந்த குரல் குளோனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். குரேல் குளோனிங் மட்டுமல்ல, டிபேக் எனப்படும் உங்களது உருவத்தை போன்ற ஒருவரை உருவாக்கி அவர் பேசுவது போன்ற காட்சிப் பதிவையும் உருவாக்கி மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.
அல்லது உங்களது உருவத்தை ஆபாச மாக சித்தரித்து உங்களுக்கு அந்த காட்சிப் பதிவை அனுப்பி பணம் பறிக்கும் மோசடி களும் தொடங்கியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *